Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 114/114 : தற்சிறப்புப் பாயி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 114/114 : தற்சிறப்புப் பாயி

    5. திருவரங்கத்து மாலை - 114/114 :தற்சிறப்புப் பாயிரம்

    மனிதக் கவி மொழியா , மங்கை வாழ் மணவாள வள்ளல்
    புனிதக் கவி கொண்டு , மாலை செய்தான் , புயல் போல் முழங்கும்
    தொனி தக்க சங்கம் , திருச் சக்கரம் , சுடர் வாள் , முசலம் ,
    குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் பொற் கோயிலுக்கே

    பதவுரை :

    புயல் போல் முழங்கும் மேகம் போல் முழங்குகின்ற
    தொனி தக்க சங்கம் பேரொலி மிக்க அழகிய பாஞ்ச ஜன்யம் எனும் சங்கத்தையும் ,
    திருச் சக்கரம் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் ,
    சுடர் வாள் ஒளியை உடைய நந்தகம் எனும் வாளையும் ,
    முசலம் கௌமோதகி எனும் கதையையும் ,
    குனி தக்க சார்ங்கம் வளைவுள்ள சார்ங்கம் எனும் வில்லையும்
    தரித்தார் அரங்கர் தாங்குபவரான திரு அரங்க நாதரது
    பொற் கோயிலுக்கே அழகிய கோவிலுக்கு ,
    மனிதக் கவி மொழியா நர ஸ்துதியாக கவி பாடாத
    மங்கை வாழ் திரு மங்கையில் வாழ்கின்ற
    மணவாள வள்ளல் அழகிய மணவாள தாசன்
    புனிதக் கவி கொண்டு பரிசுத்தமாகிய பாக்களால்
    மாலை செய்தான் ஒரு மாலையைச் செய்தான் .

    ************************************************
    திருவரங்கத்து மாலை முற்றிற்று
    ************************************************


    V.Sridhar

    Last edited by sridharv1946; 26-12-13, 19:48.
Working...
X