Announcement

Collapse
No announcement yet.

upanayanam-vikneswara pooja,punyaavachanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • upanayanam-vikneswara pooja,punyaavachanam

    கணபதி பூஜை: விக்னேஸ்வர பூஜை..
    கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

    ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

    சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மஙள்ளாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

    சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))

    .
    சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரி ஸமாப்த் யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

    கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங் கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ் பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

    ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்//பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

    அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

    பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும். அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

    ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

    வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

    புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

    ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

    தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

    விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

    நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
    மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

    தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

    ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
    நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

    தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

    கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

    கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

    மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
Working...
X