Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 005/104 : போதில் இருப்பார்க்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 005/104 : போதில் இருப்பார்க்கு

    6. திரு வேங்கட மாலை 005/104 : போதில் இருப்பார்க்கு எட்டான் திருப்பாற்கடலான் !

    சோதி மதி வந்து தவழ் சோலை மலையோடு இரண்டாய்
    மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே - போதில்
    இருப்பாற்கடலான் இபம் ஊர்ந்தார்க்கு எட்டாத்-
    திருப்பாற்கடலான் சிலம்பு

    பதவுரை :

    இருப்பாற்கடலான் - இருப்பார்க்கு + அடல் + ஆன்
    திருப்பாற்கடலான் - திரு + பால் + கடலான்

    சோதி மதி வந்து தவழ் ஒளி வீசும் சந்திரன் வந்து தவழும்
    சோலை மலையோடு உயரமான திரு மாலிருஞ்சோலை மலையோடு சேர்ந்து
    இரண்டாய் இரண்டு ஆகி
    மேதினியாள் கொங்கை நிகர் பூமிப் பிராட்டியின் இரு தனங்களைப் போல்
    வேங்கடமே இருக்கும் வேங்கடமே
    போதில் இருப்பார்க்கு தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கும் ,
    அடல் ஆன் வலிய காளையில் ஏறிச் செல்லும் சிவனுக்கும் ,
    இபம் ஊர்ந்தார்க்கு ஐராவதத்தின் மேல் ஏறிச் செல்லும் இந்திரனுக்கும்
    எட்டா எட்டாத
    திருப்பாற்கடலான் திருப் பாற்கடலில் இருக்கும் திருமாலினது
    சிலம்பு திரு மலை
    ஆகும்




    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 27-12-13, 20:15.
Working...
X