Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 010/104 : வேங்கடமே செங்கமலப் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 010/104 : வேங்கடமே செங்கமலப் பா

    6. திரு வேங்கட மாலை 010/104 : வேங்கடமே செங்கமலப் பார்வையான் சேர்வு !

    வள்ளி புணர்ந்து , ஆறு முகம் மன்னி , மயில் மேல் கொளலால்
    வெள் இலை வேல் வேள் போலும் வேங்கடமே - உள்ளினரைத்-
    தங்க மலப் பார் வையான் ; தன் அடியார் மேல் வைக்கும்
    செங்கமலப் பார்வையான் சேர்வு

    பதவுரை :

    வள்ளி புணர்ந்து முருகன் தன் மனைவியான் வள்ளியோடு கூடி இருப்பதாலும் ,
    (வேங்கட மலை மேல் வள்ளிக் கொடிகள் இருப்பதாலும்) ,
    ஆறு முகம் மன்னி ஆறு முகங்கள் இருப்பதாலும்
    (நதிகள் மலை மேல் ஓடுவதாலும்)
    மயில் மேல் கொளலால் மயில் மீது ஏறிச் செல்வதாலும்
    (மயில்கள் மலை மீது ஏறிச் செல்வதாலும்)
    வெள் இலை வேல் வெள்ளி இலை வடிவம் கொண்ட வேலை
    வேள் வைத்திருப்பதாலும் முருகன்
    போலும் வேங்கடமே போன்ற வேங்கட மலையே
    உள்ளினரை தன்னைத் தியானித்த அன்பர்களை
    மலப் பார் தங்க வையான் மூன்று மலங்கள் கொண்ட பூமியில் இருக்க விடாமல் ,
    தன் அடியார் மேல் வைக்கும் தனது பக்தர்களின் மேல் வைக்கின்ற
    செங்கமலப் பார்வையான் செந்தாமரை மலர் போன்ற கண்ணால் பார்க்கும் திருமால்
    சேர்வு சேரும் இடம் ஆகும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 01-01-14, 19:47.
Working...
X