Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 013/104 : வேங்கடமே பாண்டு மகன் இ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 013/104 : வேங்கடமே பாண்டு மகன் இ

    6. திரு வேங்கட மாலை 013/104 : வேங்கடமே பாண்டு மகன் இரதப் பாகனார் ஊர் !

    மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும்
    மீண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே - பாண்டு மகன்
    ஏறு இரதப்பாகனார் , ஏத்தும் அடியார் நாவில்
    ஊறு இரதப்பாகனார், ஊர்

    பதவுரை :

    ஏறு இரதப்பாகனார் - ஏறு இரதப் பாகனார்
    ஊறு இரதப்பாகனார் - ஊறு இரதப் பாகு அனார்,

    மாண்டு பிறக்கும் இறந்து , மறுபடியும் பிறப்பு எடுக்கும்
    துயர் போய் துன்பம் நீங்கி
    வைகுந்தம் புக்கவரும் பரம பதத்தை அடைந்தவரும்
    மீண்டு தொழக் காதலிக்கும் அங்கிருந்து மீண்டு வந்து வணங்க விரும்பும்படி உள்ள
    வேங்கடமே வேங்கடமே ,
    பாண்டு மகன் ஏறு பாண்டுவின் மகனான அர்ஜுனன் ஏறிய
    இரதப் பாகனார் தேரை செலுத்தும் சாரதி ஆனவரும் ,
    ஏத்தும் அடியார் நாவில் தம்மைத் துதிக்கும் பக்தர்களுடைய நாவில்
    ஊறு இரதப் பாகு அனார் சுரக்கும் சுவை உள்ள பாகு போன்றவருமான
    ஊர் திருமாலினது ஊர்

    V.Sridhar

Working...
X