Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 016/104 : வேங்கடமே ஏழ் உலகும் உண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 016/104 : வேங்கடமே ஏழ் உலகும் உண

    6. திரு வேங்கட மாலை 016/104 : வேங்கடமே ஏழ் உலகும் உண்ட கந்தரத்தான் ஊர்!

    எப்பூதலமும் இறைஞ்சித் திசை நோக்கி
    மெய்ப் பூசனை புரியும் வேங்கடமே - கொப்பூழ்
    இலகுமுண்டகந்தரத்தான் ஈன்று அளிக்கும் ஈரேழ்
    உலகுமுண்டகந்தரத்தான் ஊர்

    பதவுரை :

    இலகுமுண்டகந்தரத்தான் - இலகும் + முண்டகம் + தர + தான்
    உலகுமுண்டகந்தரத்தான் - உலகும் + உண்ட + கந்தரத்தான்

    எப்பூதலமும் பூமியில் உள்ள எல்லோரும்
    திசை நோக்கி இறைஞ்சி திசைகளை நோக்கி வணங்கி
    மெய்ப் பூசனை புரியும் உண்மையான பூசை செய்யும்
    வேங்கடமே வேங்கடமே
    கொப்பூழ் இலகும் முண்டகம்தர திரு நாபியில் இருக்கும் தாமரை மலர் அளிக்க
    தான் ஈன்று அளிக்கும் தான் பெற்று பாதுகாக்கும்
    ஈரேழ் உலகும் பதினான்கு உலகங்களையும்
    உண்ட கந்தரத்தான் அமுது செய்த கண்டத்தை உடைய திருமாலின்
    ஊர் ஊர் ஆகும்

    V.Sridhar

Working...
X