Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 018/104 : வேங்கடமே வந்த துக்கம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 018/104 : வேங்கடமே வந்த துக்கம்

    6. திரு வேங்கட மாலை 018/104 : வேங்கடமே வந்த துக்கம் காப்பான் தலம் !

    பித்து , மலடு , ஊமை , முடம் , பேய் , குருடு , கூன் , செவிடு ,
    மெய்த் துயர் , நோய் தீர்த்து அருளும் வேங்கடமே - பத்தருக்கு
    வந்ததுக்கங்காப்பான் ; மலர் உந்தியின் உலகம்
    தந்ததுக்கங்காப்பான் ; தலம்

    பதவுரை :

    வந்ததுக்கங்காப்பான் - வந்த + துக்கம் + காப்பான்
    தந்ததுக்கங்காப்பான் - தந்து + அதுக்கு + அங்காப்பான்

    பித்து , மலடு பைத்தியம் பிடித்தலையும் , பிள்ளைப் பேறு இன்மையையும் ,
    ஊமை , முடம் வாய் பேசாமையையும் , கால் கைகளின் குறையையும் ,
    பேய் , குருடு பேய் பிடித்தலையும் , கண் தெரியாமையையும் ,
    கூன் , செவிடு உடல் வளைதலையும் , காது கேளாமையையும் ,
    மெய்த் துயர் , நோய் உடல் துன்பங்களையும் , பிற நோய்களையும்
    தீர்த்து அருளும் வேங்கடமே நீக்கி அருளுகின்ற வேங்கடமே
    பத்தருக்கு வந்த தன் அடியார்களுக்கு வந்த
    துக்கம் காப்பான் துன்பங்களை நீக்கி பாதுகாப்பவனும் ,
    மலர் உந்தியின் தனது நாபித் தாமரையிலிருந்து
    உலகம் தந்து உலகை உண்டாக்கி
    அதுககு அங்காப்பான் அவ்வுலகை உண்ண வாய் திறப்பவனும் ஆகிய திருமாலின்
    தலம் இடம் ஆகும்


    V.Sridhar

Working...
X