Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 019/104 : வேங்கடமே கம்ப வள மா வெĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 019/104 : வேங்கடமே கம்ப வள மா வெĪ

    6. திரு வேங்கட மாலை 019/104 : வேங்கடமே கம்ப வள மா வென்றான் சேர்வு !

    வாடப் பசித்த வரி உழுவை வால் ஆட்டி ,
    மேடத்தைப் பார்த்து உறுக்கும் வேங்கடமே - கூடத்துக்-
    கம்பவளமாவென்றான் , காசினிக்கும் வெண்ணெய்க்கும்
    செம்பவளமாவென்றான் , சேர்வு

    பதவுரை :

    கம்பவளமாவென்றான் - கம்ப + வள + மா+ வென்றான் செம்பவளமாவென்றான் - செம் + பவளம் + ஆ + என்றான்

    வாடப் பசித்த வாட்டம் உண்டாகும்படி பசித்துள்ள ,
    வரி உழுவை உடல் கோடுகளை உடைய புலிகள்
    மேடத்தைப் பார்த்து ஆட்டின் வடிவமான மேஷ ராசியைப் பார்த்து
    வால் ஆட்டி அதை தின்பதற்காக தன் வாலை அசைத்து
    உறுக்கும் வேங்கடமே கோபமாய் செல்லும் இடமான வேங்கடமே
    கூடத்துக் கம்ப யானைச் சாலையில் தறியில் கட்டி வைக்கக் கூடிய
    வள மா வென்றான் கொழுப்புள்ள குவலயாபீ டம் எனும் யானையைக் கொன்றவனும்
    காசினிக்கும் வெண்ணெய்க்கும் பூமியையும் வெண்ணெயையும் விழுங்க
    செம் பவளம் சிவந்த பவழம் போன்ற வாயை
    ஆ என்றான் ஆ என்று திறந்தவனும் ஆன திருமால்
    சேர்வு சேர்ந்திருக்கும் இடம்



    V.Sridhar

Working...
X