Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 021/104 : வேங்கடமே விதூரனுக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 021/104 : வேங்கடமே விதூரனுக்கு

    6. திரு வேங்கட மாலை 021/104 : வேங்கடமே விதூரனுக்கு வாரா விருந்தான் வரை !

    ஒண் சிந்தூரத்தை வெறுத்து ஓடும் பிடி வேழம்
    விண் சிங்கம் கண்டு அணைக்கும் வேங்கடமே - எண் சிந்தைக்கு
    ஓராவிருந்தான் , ஒரு நாள் விதூரனுக்கு
    வாராவிருந்தான் வரை

    பதவுரை :

    ஓராவிருந்தான் - ஓரா + இருந்தான்
    வாராவிருந்தான் - வாரா + விருந்தான்

    ஒண் சிந்தூரத்தை வெறுத்து ஒளி உள்ள ஆண் யானையை வெறுத்து
    ஓடும் பிடி வேழம் பிணங்கும் பெண் யானை
    விண் சிங்கம் கண்டு வானத்தில் வரும் சிங்க வடிவான சிம்ஹ ராசியை பார்த்து
    அணைக்கும் வேங்கடமே ஆண் யானையை தானே தழுவும் இடமான வேங்கடமே
    எண் சிந்தைக்கு எண்ணும் மனதிற்கு
    ஓரா இருந்தான் அறியப்படாமல் இருந்தவனும்
    ஒரு நாள் விதூரனுக்கு ஒரு நாளில் விதுரனுக்கு
    வாரா விருந்தான் வருவதற்கு அரிய விருந்தினனாய் வந்தவனும் ஆன திருமாலின்
    வரை திருமலை ஆகும்


    V.Sridhar

Working...
X