Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 022/104 : வேங்கடமே அன்பால் ஆ குவ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 022/104 : வேங்கடமே அன்பால் ஆ குவ

    6. திரு வேங்கட மாலை 022/104 : வேங்கடமே அன்பால் ஆ குவித்தான் காப்பு !

    மாது மடக் கன்னி கழை வந்து அணுகி கம்பத்தின்
    மீது நடிப்பாள் ஒக்கும் வேங்கடமே - ஊது குழல்
    பாலன்பாலாக்குவித்தான் , பஞ்சவர்க்கா நூற்றுவரைக்-
    காலன்பாலாக்குவித்தான் காப்பு

    பதவுரை :

    பாலன்பாலாக்குவித்தான் - பால் + அன்பால் +ஆ + குவித்தான்
    காலன்பாலாக்குவித்தான் - காலன் + பால் + ஆக்குவித்தான்

    மாது மடக் கன்னி அழகும் மடமையும் உள்ள இளம் பெண் ஆன கன்யா ராசி
    கழை வந்து அணுகி மூங்கிலின் அருகில் வரும்போது
    கம்பத்தின் மீது கழைக்கோலின் மேல்
    நடிப்பாள் ஒக்கும் கூத்தாடும் மங்கையைப் போல் இருக்கும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    ஊது குழல் பால் தான் ஊதும் வேய்ங்குழல் மீது உள்ள
    அன்பால் ஆ குவித்தான் அன்பினால் பசுக்களை திரளும்படி செய்தவனும் ,
    பஞ்சவர்க்கா பஞ்ச பாண்டவர்களுக்காக
    நூற்றுவரை கௌரவர்கள் நூற்றுவரையும்
    காலன் பால் ஆக்குவித்தான் யமனிடத்தில் சேர்ப்பித்தவனுமான திருமால்
    காப்பு உயிர்களைப் பாதுகாக்கும் இடம் ஆகும் .




    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 06-01-14, 20:10.
Working...
X