Announcement

Collapse
No announcement yet.

பருப்பு உருண்டை மோர் குழம்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பருப்பு உருண்டை மோர் குழம்பு

    சங்கராந்திக்கு இந்த மோர்குழம்பை பண்ணிப்பாருங்கள் எப்பவும் செய்வது போல இல்லாமல் புதுவிதமாக

    தேவையானவை:


    துவரம்பருப்பு - 1 கப்
    புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
    தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
    கடலை பருப்பு - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் 2
    கடுகு - அரை டீஸ்பூன்
    குண்டு மிளகாய் - 3 - 4
    வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
    பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
    அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
    தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
    அதில் உப்பு சேர்க்கவும்.
    அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
    வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
    வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
    நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
    அருமையாக இருக்கும்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X