Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 028/104 : வேங்கடமே வேதத்து இருக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 028/104 : வேங்கடமே வேதத்து இருக

    6. திரு வேங்கட மாலை 028/104 : வேங்கடமே வேதத்து இருக்கு உழையார் சேர்வு

    'மண் மூலம் தா' என்று மந்தி கடுவற்கு உரைப்ப

    விண் மூலம் கேட்டு ஏங்கும் வேங்கடமே - ஒண் மூல
    வேதத்திருக்குழையார் , வெய்யோன் இரண்டு அனைய
    சீதத்திருக்குழையார் சேர்வு

    பதவுரை :

    வேதத்திருக்குழையார் - வேதத்து + இருக்கு + உழையார்
    சீ தத்திருக்குழையார் - சீத + திரு + குழையார்

    'மண் மூலம் தா' என்று "மண்ணில் இருக்கும் (மூலம்) கிழங்கை எடுத்து தா" என்று
    மந்தி கடுவற்கு உரைப்ப பெண் குரங்கு ஆண் குரங்கை நோக்கி சொல்ல
    விண் மூலம் கேட்டு ஏங்கும் வானத்தில் இருக்கும் மூல நக்ஷத்திரம் கேட்டு வருந்தும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    ஒண் மூல சிறந்த பிரமாணமாகவும் , முதல் நூலாகவும் உள்ளவையான
    வேதத்து இருக்கு உழையார்வேதங்களின் மந்திரங்களில் இருப்பவரும்
    வெய்யோன் இரண்டு அனைய இரண்டு சூரியர்களைப் போன்ற
    சீத திரு குழையார் குளிர்ந்த ஒளி உள்ள குண்டலங்கள் அணிந்த திருமால்
    சேர்வு தங்கும் இடம் ஆகும்


    V.Sridhar

Working...
X