Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 029/104 : வேங்கடமே ஆர்த்த வலம்ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 029/104 : வேங்கடமே ஆர்த்த வலம்ப

    6. திரு வேங்கட மாலை 034/104 : வேங்கடமே ஆர்த்த வலம்புரியார் பற்று !

    திங்கள் இறுமாந்து உலவ , தீம்பால் கவளம் என்று ,
    வெங்களிறு கை நீட்டும் வேங்கடமே - பொங்கு அமரில்
    ஆர்த்தவலம்புரியார் , ஆட்பட்டார் செய்த பிழை
    பார்த்தவலம்புரியார் , பற்று

    பதவுரை :
    ஆர்த்தவலம்புரியார் - ஆர்த்த + வலம்புரியார்
    பார்த்தவலம்புரியார் - பார்த்து + அவலம் + புரியார்

    திங்கள் இறுமாந்து உலவ சந்திரன் தன் அழகால் கர்வம் கொண்டு வானில் திரிய
    தீம்பால் கவளம் என்று இனிய பால் கலந்த உணவுக் கவளம் என்று நினைத்து
    வெங்களிறு கை நீட்டும் வெவ்விய மத யானை துதிக்கை நீட்டும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    பொங்கு அமரில் கொடிய போரில்
    ஆர்த்த வலம்புரியார் முழக்கிய பாஞ்ச ஜன்யம் எனும் சங்கத்தை உடையவரும்
    ஆட்பட்டார் தமக்கு அடிமைப் பட்ட பக்தர்கள்
    செய் பிழை பார்த்து செய்த குற்றத்தைக் கண்டு
    வலம் புரியார் அதற்கான துன்பத்தைத் தராமல் இருப்பவருமான திருமால்
    பற்று விரும்பும் இடம் ஆகும்

    V.Sridhar


    Last edited by sridharv1946; 08-01-14, 19:28.
Working...
X