Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 043/104 : வேங்கடமே பதினாறு ஆயிர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 043/104 : வேங்கடமே பதினாறு ஆயிர

    6. திரு வேங்கட மாலை 043/104 : வேங்கடமே பதினாறு ஆயிரம் தாரத்தர் அகம் !
    தேவர் உடை ஐந்தருவின் செந்தேன் - இறால் கிழிய ,
    மீ
    வருடை பாய்கின்ற வேங்கடமே - மூவடி மண்
    போயிரந்தாரத்தர் புனையும் ஒரு பதினாறு
    ஆயிரந்தாரத்தர் அகம்

    பதவுரை :

    போயிரந்தாரத்தர் - போய் + இரந்தார் + அத்தர்
    ஆயிரந்தாரத்தர் - ஆயிரம் + தாரத்தர்

    தேவர் உடை ஐந்தருவின் தேவர்களுடைய ஐவகை கற்பக மரங்களில்
    செந்தேன் இறால் கிழிய கட்டிய சிவந்த தேன் கூடு கிழியும்படி
    மீ வருடை பாய்கின்ற மலை ஆடுகள் தாவிப் பாயும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    மூவடி மண் போய் இரந்தார் மாவலியிடம் சென்று மூவடி நிலத்தை யாசித்தவரும் ,
    அத்தர் எல்லா உயிர்களுக்கும் தந்தை ஆகின்றவரும் ,
    புனையும் அலங்காரம் பெற்ற
    ஒரு பதினாறு ஆயிரம் ஒப்பற்ற பதினாறு ஆயிரம்
    தாரத்தர் மனைவியர்கள் உடையவரும் ஆகிய திருமாலின்
    அகம் இருப்பிடம் ஆகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-01-14, 19:38.
Working...
X