Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 044/104 : வேங்கடமே பேய்த் தனம் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 044/104 : வேங்கடமே பேய்த் தனம் 

    6. திரு வேங்கட மாலை 044/104 : வேங்கடமே பேய்த் தனம் சுவைத்தார் வரை !

    வன் குறிஞ்சி மாதர் பால் வானோர் மருந்துக்கு
    மென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே - நன்கு உறிஞ்சி
    பேய்த்தநஞ்சுவைத்தார் ; பிறர்க்கு அமுது ஈந்து , ஈசனுக்கு
    வாய்த்தநஞ்சுவைத்தார் ; வரை

    பதவுரை :

    பேய்த்தநஞ்சுவைத்தார் - பேய்த் + தனம் + சுவைத்தார்
    வாய்த்தநஞ்சுவைத்தார் - வாய்த்த + நஞ்சு + வைத்தார்

    வன் குறிஞ்சி மாதர் பால் வலிய குறிஞ்சி நிலத்துக் குறத்திகளிடம்
    வானோர் மருந்துக்கு தேவர்கள் அமுதத்துக்கு
    மென் குறிஞ்சித் தேன் குறிஞ்சி மரத்துத் தேனைப்
    மாறும் பண்ட மாற்றாய் கொள்ளும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    பேய்த் தனம் நன்கு உறிஞ்சி பூதனையின் தனத்தை நன்றாக உறிஞ்சிப்
    சுவைத்தார் பால் குடித்தவரும் ,
    பிறர்க்கு அமுது ஈந்து மற்ற தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்து
    ஈசனுக்கு வாய்த்த நஞ்சு சிவனுக்கு பொருந்திய நஞ்சை
    வைத்தார் உண்ண வைத்தவரும் ஆகிய திருமாலின்
    வரை திருமலை ஆகும்

    V.Sridhar

Working...
X