Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 048/104 : வேங்கடமே விரும்பினர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 048/104 : வேங்கடமே விரும்பினர்

    6. திரு வேங்கட மாலை 048/104 : வேங்கடமே விரும்பினர் மேல் ஆர்வத்தார் நாடு !

    காந்தள் , இரவலர் போல் , கை ஏற்ப , கொன்றை கொடை
    வேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே - பூந்துளவின்
    கான்மடங்காமார்வத்தார் காண விரும்பினர் மேல்
    நான்மடங்காமார்வத்தார் நாடு

    பதவுரை :

    கான்மடங்காமார்வத்தார் - கான் + மடங்கா + மார்வத்தார் நான்மடங்காமார்வத்தார் - நான் + மடங்கு + ஆம் ஆர்வத்தார்


    காந்தள் செங்காந்தாள் மலர்
    இரவலர் போல் கை ஏற்ப யாசகர் ஏற்கின்ற கை போன்று இருக்க
    கொன்றை கொன்றை மரம்
    கொடை வேந்தன் என ஈகைக் குணம் உள்ள அரசன் யாசகனிடம் பொன் சொரிவது போல்
    பொன் சொரியும் காந்தள் மலர் மீது பொன்னைச் சொரியும் இடம் ஆன
    வேங்கடமே திருவேங்கட மலையே
    பூந்துளவின் கான் மடங்கா அழகிய திருத்துழாயின் வாசனை மாறாத
    மார்வத்தார் திரு மார்பை உடையவரும்
    காண விரும்பினர் மேல் தம்மைச் சேவிக்க விரும்பிய பக்தர்களிடம்
    நான் மடங்கு ஆம் ஆர்வத்தார் பல மடங்கு அன்பு உடையவருமான திருமாலின்
    நாடு திருத்தலம் ஆகும்


    V.Sridhar

Working...
X