Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 051/104 : வேங்கடமே ஆய்ந்தபரதத்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 051/104 : வேங்கடமே ஆய்ந்தபரதத்

    6. திரு வேங்கட மாலை 051/104 : வேங்கடமே ஆய்ந்தபரதத்துவந்தான் வாழ்வு !

    கோல மணிப் பாறையில் பாய் கோடரங்கள் , செங்கதிரோன்
    மேல் அனுமான் பாய்ந்தனைய வேங்கடமே - நாலு மறை
    ஆய்ந்தபரதத்துவந்தான் ஆனான் , குடம் ஆடல்
    வாய்ந்தபரதத்துவந்தான் வாழ்வு

    பதவுரை :

    ஆய்ந்தபரதத்துவந்தான் - ஆய்ந்த + பர + தத்துவம் + தான்
    வாய்ந்தபரதத்துவந்தான் - வாய்ந்த + பரதத்து + உவந்தான்

    கோல மணிப் பாறையில் அழகிய மாணிக்கப் பாறையின் மேல்
    பாய் கோடரங்கள் பாய்கின்ற குரங்குகள்
    செங்கதிரோன் மேல் சிவந்த சூரிய மண்டலத்தின் மேல்
    அனுமான் பாய்ந்தனைய அனுமன் பாய்ந்தது போலத் தோன்றும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நாலு மறை ஆய்ந்த நான்கு வேதங்களாலும் ஆய்ந்து கூறப்பட்ட
    பரதத்துவம் தான் ஆனான் மேலான உண்மைப் பொருள் தானே ஆனவனும் ,
    குடம் ஆடல் வாய்ந்த குடம் எடுத்து ஆடும்
    பரதத்து உவந்தான் கூத்தை செய்வதில் உவப்பு உள்ளவனுமான திருமால்
    வாழ்வு வாழும் இடம் ஆகும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 14-01-14, 21:35.
Working...
X