Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 053/104 : வேங்கடமே தாமோதரனார் வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 053/104 : வேங்கடமே தாமோதரனார் வ

    6. திரு வேங்கட மாலை 053/104 : வேங்கடமே தாமோதரனார் வாழ்வு !

    வண்மை திகழ் வெண் பளிங்கு வட்டத்தில் கண் துயில் மான்
    விண் மதியில் மான் ஏய்க்கும் வேங்கடமே - ஒண் மதியால்
    நூலைத்தாமோதரனார் நோக்க அரியார் துவள
    மாலைத்தாமோதரனார் வாழ்வு

    பதவுரை :

    நூலைத்தாமோதரனார் - நூலைத் + தாம் + ஓது + அரனார் மாலைத்தாமோதரனார் - மாலைத் + தாமோதரனார்

    வண்மை திகழ் அழகாக விளங்கும்
    வெண் பளிங்கு வட்டத்தில் வெண்மையான வட்டப் பளிங்குப் பாறையில்
    கண் துயில் மான் படுத்துத் தூங்கும் மான்
    விண் மதியில் வானத்தில் உள்ள சந்திரனில் இருக்கும்
    மான் ஏய்க்கும் மானைப் போல இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே ,
    ஒண் மதியால் சிறந்த புத்தியினால்
    நூலைத் தாம் ஓது அரனார் பல நூல்களை தாம் படித்த சிவனாலும்
    நோக்க அரியார் கண்ணால் பார்க்க முடியாதவரும் ,
    துவள மாலைத் திருத் துழாய் மாலை அணிந்தவரும் ,
    தாமோதரனார் தாமோதரன் எனப்படுபவருமான திருமாலின்
    வாழ்வு வாழுமிடம் ஆகும்

    V.Sridhar


  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 053/104 : வேங்கடமே தாமோதரனார் &#2

    அரனின் அடி முடி காணா கதை அறிவோம் “அரனார் நோக்க அரியார்” இது புதிதாக இருக்கிறதே

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 053/104 : வேங்கடமே தாமோதரனார் &am

      Originally posted by soundararajan50@gmai View Post
      அரனின் அடி முடி காணா கதை அறிவோம் “அரனார் நோக்க அரியார்” இது புதிதாக இருக்கிறதே
      "பின்னிட்ட சடையானும் ...... புகல் அரிய வைகுந்த நீள் வாசல்"


      என்று குலசேகர ஆழ்வாரும் பாடி இருக்கிறாரே !

      Comment

      Working...
      X