Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோத

    6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோதிமருப்பு ஒசித்தார் ஊர் !

    காதல் இற்றுச் சார் தவர்க்கும் , காமியத்தைச் சார்ந்தவர்க்கும் ,
    வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே - போதகத்தை
    மோதிமருப்பொசித்தார் , முன் பதினாராயிறவர்
    ஓதிமருப்பொசித்தார் ஊர்

    பதவுரை :

    மோதிமருப்பொசித்தார் - மோதி + மருப்பு + ஒசித்தார்
    ஓதிமருப்பொசித்தார் - ஓதி + மரு + பொசித்தார்

    காதல் இற்று பிரபஞ்ச வாழ்வில் ஆசை ஒழித்து
    சார் தவர்க்கும் தன்னிடம் வந்த முனிவர்களுக்கும் ,
    காமியத்தைச் சார்ந்தவர்க்கும் பிரபஞ்ச வாழ்வையே விரும்பினவர்களுக்கும்
    வேதனை துனபத்தின் ( பிரமனையும்) *
    கூற்றை கூட்டத்தை (எமனையும்) *
    தவிர்க்கும் ஒழித்த( விலக்கிய ) *
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    போதகத்தை மோதி குவலயாபீ டம் எனும் யானையை மோதி ,
    மருப்பு ஒசித்தார் அதன் தந்தங்களை உடைத்தவரும் ,
    முன் பதினாறாயிரவர் கிருஷ்ணனாக பதினாறாயிரம் பெண்களின்
    ஓதி மரு பொசித்தார் கூந்தல் மணத்தை நுகர்ந்தவருமான திருமாலின்
    ஊர் இருப்பிடம் ஆகும்



    * ஒரு வகையாய்ப் பிரிந்து இரு பொருள் கூறும் செம்மொழிச் சிலேடை

    V.Sridhar


  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோ&a

    செம்மொழிச் சிலேடை ஆஹா என்ன அருமை

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோ&a

      Originally posted by soundararajan50@gmai View Post
      செம்மொழிச் சிலேடை ஆஹா என்ன அருமை
      இது சம்ஸ்க்ருதத்தில் அபின்ன பத ச்லேஷா என்று கூறப்படும் ,
      இனி வரும் பாடல்களில் எல்லாம் ஒரு சிலேடை இருக்கும்


      Comment

      Working...
      X