Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 057/104 : வேங்கடமே மூடர் மனமாம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 057/104 : வேங்கடமே மூடர் மனமாம்

    6. திரு வேங்கட மாலை 057/104 : வேங்கடமே மூடர் மனமாம் மனைக்கு ஒன்றார் சேர்பு !

    கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும் ,
    வேடரும் அங்கைவரை வெல் வேங்கடமே - மூடர்
    மனமாமனைக்கொன்றார் , வன் கஞ்சன் என்னும்
    சினமாமனைக் கொன்றார் சேர்பு

    பதவுரை :

    மனமாமனைக்கொன்றார் - மனம் + ஆம் + மனைக்கு + ஒன்றார்
    சினமாமனைக் கொன்றார் - சின + மாமனைக் + கொன்றார்

    கோடல் இலா உள்ளத்து கோணல் இல்லாத நேரான மனத்தை உடைய
    கோது இல் அடியவரும் குற்றம் இல்லாத அடியார்களும்
    அங்கு ஐவரை வெல் அவ்விடத்து பஞ்சேந்திரியங்களை வெல்லும் இடமும் ,
    வேடரும் வேடர்களும்
    அம் கை வரை வெல் அழகிய துதிக்கையுடைய மலை போன்ற யானையை வெல்லும் இடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    மூடர் மனமாம் மனைககு மூடர்களுடைய உள்ளம் ஆகிய வீட்டில்
    ஒன்றார் வந்து சேராதவர்களும்
    வல் கஞ்சன் என்னும் கொடிய கம்சன் எனும்
    சின மாமனைக் கொன்றார் கோபமுடைய மாமனைக் கொன்றவருமான திருமால்
    சேர்பு சேருமிடம் ஆகும்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 17-01-14, 20:19.
Working...
X