Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 060/104 : வேங்கடமே ஞானியர்கள் க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 060/104 : வேங்கடமே ஞானியர்கள் க

    information

    Information

    6. திரு வேங்கட மாலை 060/104 :



    information

    Information

    வேங்கடமே ஞானியர்கள் குறி எட்டு அக்கரத்தார் !





    தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் , மாதவத்தோர்
    மேனியும் , ஐயம்பொழியும் வேங்கடமே - ஞானியர்கள்
    தாங்குறியெட்டக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய்
    தாங்குறியெட்டக்கரத்தார் சார்பு

    பதவுரை :

    தாங்குறியெட்டக்கரத்தார் - தாம் + குறி + எட்டு + அக்கரத்தார்
    தாங்குறியெட்டக்கரத்தார் - தாங்கு+ உறி + எட்டு + அக் + கரத்தார்

    தேன் இயலும் சூடிய மலர்களிலிருந்து சொரிகின்ற தேனை உடைய
    கூந்தலார் செங்கரமும் கூந்தல் கொண்ட மகளிரது சிவந்த கரங்கள்
    ஐயம் பொழியும் இரப்பவர்க்குப் பிச்சை இடும் இடமும்
    மா தவத்தோர் மேனியும் சிறந்த தவம் செய்யும் முனிவர்களது உடம்பு
    ஐ அம்பு ஒழியும் மன்மதனது பஞ்ச பாணங்களை ஒழிக்கும் இடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    ஞானியர்கள் தாம் குறி ஞானம் உள்ளவர்கள் தியானிக்கும்
    எட்டு அக்கரத்தார் அஷ்டாக்ஷர மந்திரத்தை உடையவரும் ,
    தாள் உரல் மேல் வைத்து தன் காலை உரல் மேல் வைத்து
    வெண்ணெய் தாங்கு உறி எட்டு வெண்ணெய் வைத்துள்ள உரலை எட்டிப் பிடித்த
    அக் கரத்தார் அழகிய கையை உடைய திருமால்
    சார்பு சார்ந்து இருக்கும் இடம் ஆகும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 19-01-14, 20:53.
Working...
X