Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 062/104 : வேங்கடமே தெய்வங்கள் வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 062/104 : வேங்கடமே தெய்வங்கள் வ

    information

    Information

    6. திரு வேங்கட மாலை 062/104 :



    information

    Information

    வேங்கடமே தெய்வங்கள் வச்ச மயக்கத்தினார் வாழ்வு !




    முன்னூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு
    மெய்ந்நூல் நலங்கவரும் வேங்கடமே - பொய்ந் நூலால்
    அச்சமயக்கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள்
    வச்சமயக்கத்தினார் வாழ்வு

    பதவுரை :

    அச்சமயக்கத்தினார் - அச் + சமய + கத்தினார்
    வச்சமயக்கத்தினார் - வச்ச + மயக்கத்தினார்

    முன்னூல் மறையவர்
    நா முப்புரி நூல் அணிந்த அந்தணர்களின் நாவானது
    மெய்ந் நூல் நலம் கவரும் உண்மை சொல்லும் சாஸ்திரங்களின் பொருளை கற்கும் இடமும்
    மூது அரம்பை மாரின் நடு பழைய தேவமாதர்களின் மெல்லிய இடையானது
    மெய்ந்நூல் நலங்க வரும் பஞ்சு நூலிற்கு ஒப்பாகாது இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    பொய்ந் நூலால் பொய்யான நூல்களால்
    அச் சமயம் கத்தினார் ஆதரிக்க அந்த மதக் கோட்பாடுகளை பிதற்றுபவர்கள் விரும்பும்படி
    தெய்வங்கள் வச்ச பல தெய்வங்களை உண்டாக்கி வைத்த
    மயக்கத்தினார் மாயை உடையவரான திருமால்
    வாழ்வு வாழும் இடம் ஆகும்


    V.Sridhar

Working...
X