Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 064/104 : வேங்கடமே மாரீசனார் மீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 064/104 : வேங்கடமே மாரீசனார் மீ

    information

    Information

    6. திரு வேங்கட மாலை 064/104 :



    information

    Information

    வேங்கடமே மாரீசனார் மீது சீற்றமாரீசனார் சேர்வு !





    நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
    மென்முலையும் , கற்புரம் சேர் வேங்கடமே - முன் மலைந்து
    தோற்றமாரீசனார் தோற்றி மாயம் புரிய
    சீற்றமாரீசனார் சேர்வு

    பதவுரை :

    தோற்றமாரீசனார் - தோற்ற + மாரீசனார்
    சீற்றமாரீசனார் - சீற்றம் + ஆர் + ஈசனார்

    நன் முலை போல்
    அழகிய முல்லை அரும்பு போன்ற

    வெண் நகையார் வெண்மையான பற்களை உடைய மகளிர்
    நாயகர் மேல் வைத்த நெஞ்சும் தத்தம் கணவரிடம் செலுத்திய மனம்,
    கற்பு உரம் சேர் பதிவிரதா தர்மத்தின் வலிமை பொருந்தியதாகவும்
    மென்முலையும் அம்மகளிருடைய மென்மையான தனங்கள்
    கற்புரம் சேர் பச்சைக் கற்பூரம் பூசப்பெற்றதாகவும் இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    முன் மலைந்து முன்பு யாக காலத்தில் எதிர்த்து
    தோற்ற மாரீசனார் தோற்றோடிய மாரீசன்
    தோற்றி மாயம் புரிய மீண்டும் வந்து காட்டில் மானாக மாயம் செய்ததால்
    சீற்றம் ஆர் ஈசனார் அவனிடம் கோபம் கொண்ட எல்லோர்க்கும் தலைவன் ஆன திருமால்
    சேர்வு சேர்ந்திருக்கும் இடம் ஆகும்

    V.Sridhar





    Last edited by sridharv1946; 20-01-14, 13:44.

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 064/104 : வேங்கடமே மாரீசனார் ம&#3

    உள்ளத்தின் உள்ளேயும் கற்பு உரம் , வெளியேயும் கற்பூரம் என்று கவிநயத்தை ரசிக்கலாம்

    Comment

    Working...
    X