Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 067/104 : வேங்கடமே துஞ்சாரைக் க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 067/104 : வேங்கடமே துஞ்சாரைக் க

    information

    Information

    6. திரு வேங்கட மாலை 067/104 : வேங்கடமே துஞ்சாரைக் கூடு அணனார் முத்து அலையார் குன்று !




    கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
    வேள் கரமும் அம்பஞ்சார் வேங்கடமே - நீள் கரனார்
    தூடணனார்முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
    கூடணனார்முத்தலையார் குன்று

    தூடணனார்முத்தலையார் - தூடணனார் + முத்தலையார்
    கூடணனார்முத்தலையார் - கூடு + அணனார் + முத்து + அலையார்

    கோள் ஆடவர்களை வருத்துவதையும்,
    கரவு கற்ற அவர்கள் மனதை வஞ்சனையாய்க் கவருவதையும் பயின்ற
    விழிக் கோதையர்கள் கண்களை உடைய பெண்களது
    பொன் தாளும் அழகிய கால்கள்
    அம் பஞ்சு ஆர் அழகிய செம்பஞ்சுக் குழம்பு தடவியதாகவும் ,
    வேள் கரமும் மன்மதனது கைகள்
    அம்பு அஞ்சு ஆர் பஞ்ச பாணங்கள் கொண்டதாகவும் இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நீள் கரனார் தூடணனார் பெரிய கரனும் , தூஷணனும் ,
    முத்தலையார் துஞ்ச எய்து திரிசிரசும் இறக்கும்படி அம்பு எய்தவரும் ,
    துஞ்சாரைக் கூடு அணனார் தூங்காமல் இருந்த இலக்குவனைச் சேர்ந்த அண்ணனும் ,
    முத்து அலையார் முத்துக்களை உடைய கடலில் பள்ளி கொண்டவருமான திருமாலின்
    குன்று மலை ஆகும்

    V.Sridhar


    Last edited by sridharv1946; 20-01-14, 21:38.
Working...
X