Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 069/104 : வேங்கடமே குன்றேந்தி வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 069/104 : வேங்கடமே குன்றேந்தி வ

    information

    Information

    6. திரு வேங்கட மாலை 069/104 : வேங்கடமே குன்றேந்தி வான வருடம் தடுத்தார் வாழ்வு !





    மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
    மேவிப் புயல் தவழும் வேங்கடமே - ஆவிக்குள்
    ஆனவருடந்தடுத்தார் ஆனிரைக்காக் குன்றேந்தி
    வானவருடந்தடுத்தார் வாழ்வு

    பதவுரை :

    ஆனவருடந்தடுத்தார் - ஆன + அருள் + தந்து + அடுத்தார்
    வானவருடந்தடுத்தார் - வான + வருடம் + தடுத்தார்


    மாவில் குயிலும் மாமரத்தில் குயில்கள்
    ஒளி செய்ய ஒளிந்து கொள்ளவும் ,

    மயிலும் மயில்கள்
    ஒளி செய்ய பிரகாசம் அடையுமிடமும்
    மேவிப் புயல் தவழும் பொருந்தி மேகம் சஞ்சரிக்கும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    ஆன அருள் தந்து தேவையான கருணை புரிந்து
    ஆவிக்குள் அடுத்தார் உயிரில் கலந்தவரும் ,
    ஆன் நிரைக்கா பசுக் கூட்டங்களைக் காப்பாற்றும் பொருட்டு
    குன்று ஏந்தி கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து
    வான வருடம் தடுத்தார் மேக மழையைத் தடுத்தவருமான திருமால்
    வாழ்வு வாழுமிடம் ஆகும்



    V.Sridhar

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 069/104 : வேங்கடமே குன்றேந்தி &a

    மேகத்தைக் கண்டு அஞ்சி குயில்கள் ஒளிந்து கொள்வதையும் மயில்கள் பிரகாசம் ஆகி மகிழ்வதையும் "ஒளி செய்ய " என்று குறிப்பிடும் கவி நயம் ரசிக்கத் தக்கது.
    Last edited by sridharv1946; 21-01-14, 20:53.

    Comment

    Working...
    X