Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 085/104 : வேங்கடமே பாதம் ஆம் போத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 085/104 : வேங்கடமே பாதம் ஆம் போத











    மாதரார் கண்ணும் பெண்களுடைய கண்கள்
    காமர் வேத மாற்கம் செறியும் காம நூல் வழியை உடைய இடமும் ,
    மலைச் சாரலும் மலைப் பக்கங்கள்
    காமர் வே தமால் அழகிய மூங்கில்கள் தம் உயரத்தால்
    கம் செறியும் வானத்தை நெருங்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    பாதம் ஆம் போதை தன் திருவடி ஆன தாமரையை
    படத்து வைத்தார் காளிங்கனின் தலையில் வைத்தவரும் ,
    போர் வளைய பாரதப் போர் வந்தவுடன்
    மாற்றரசர் வாதைப்பட எதிரி மன்னர்கள் துன்பம் அடையும்படி
    துவைத்தார் அவர்களை அடித்தவருமான திருமாலின்
    வாழ்வு வாழுமிடம் ஆகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 06-02-14, 13:17.
Working...
X