Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 086/104 : வேங்கடமே தித்திக்கும

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 086/104 : வேங்கடமே தித்திக்கும




    எத்திக்கும் காம்பும் , எயினரும் , ஆரத்தினையே
    வித்திக் கதிர் விளைக்கும்
    வேங்கடமே - தித்திக்கும்
    காரிமாறன்பாவார் , காதலித்தார் தம் பிறவி
    வாரிமாறன்பாவார் வாழ்வு








    எத்திக்கும் மலையின் எல்லாப் பக்கங்களிலும்
    காம்பும் மூங்கில் மரங்கள்
    ஆரத்தினையே வித்தி முத்துக்களை உண்டாக்கி
    கதிர் விளைக்கும் ஒளி வீசும் இடமும் ,
    எயினரும் வேடர்கள்
    ஆரத் தினையே வித்தி அதிகமாக தினையை விதைத்து
    கதிர் விளைக்கும் கதிர்களை விளைவிக்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    தித்திக்கும் காரி மாறன் இனிமையான காரி என்பவரது குமாரர் ஆன நம்மாழ்வாரின்
    பாவார் பாசுரங்களைப் பெற்றவரும் ,
    காதலித்தார் தம் பிறவி வாரி விரும்பிய அடியார்களுடைய பிறவிக்கடலை
    மாறு அன்பாவார் நீக்கும் அருள் உடையவருமான திருமால்
    வாழ்வு இருக்கும் இடம் ஆகும்


    V.Sridhar


    Last edited by sridharv1946; 07-02-14, 11:58.
Working...
X