Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 087/104 : வேங்கடமே கரு வில் படைī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 087/104 : வேங்கடமே கரு வில் படைī




    பார் ஓடு கான் யாறும் , பல்களிறும் , நந்தவனம்
    வேரோடலைத் தீர்க்கும்
    வேங்கடமே - கார் ஓதம்
    சுட்டகருவில்படையார் , தொண்டரை மீண்டு ஏழு வகைப்
    பட்டகருவில்படையார் பற்று







    பார் ஓடு கான் யாறும் பூமியை நோக்கி ஓடும் காட்டாறுகள்
    நம் தவனம் நமது தாகம்
    வேர் ஓடலை தீர்க்கும் நிலைத்திருப்பதை நீக்கும் இடமும் ,
    பல் களிறும் பல மத யானைகள்
    நந்தவனம் பூந்தோட்டத்து மரங்களை
    வேரோடு அலைத்து ஈர்க்கும் வேருடன் அசைத்து இழுக்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    கார் ஓதம் சுட்ட கரிய கடலை வெதும்பச் செய்த
    கரு வில் படையார் பெரிய வில் ஆகிய ஆயுதத்தை உடையவரும்
    தொண்டரை அடியார்களை
    மீண்டு ஏழு வகைப் பட்ட கருவில் மறுபடி ஏழு வகைப் பிறப்புகளில்
    படையார் படைக்கச் செய்யாதவருமான திருமால்
    பற்று விரும்பி இருக்கும் இடம் ஆகும்

    V.Sridhar


    Last edited by sridharv1946; 07-02-14, 22:00.
Working...
X