Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 090/104 : வேங்கடமே மதுகையிடவர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 090/104 : வேங்கடமே மதுகையிடவர்





    சாரும் அருவி தவழ் சாரலும் , செஞ்சந்தனத்தின்
    வேரும் , அரவம் அறா வேங்கடமே - நேரும்
    மதுகையிடவர்க்கறுத்தார் , மாமலரோன் சாபம்
    மதுகையிடவர்க்கறுத்தார் வாழ்வு








    சாரும் அருவி தன் மீது உள்ள அருவிகள்
    தவழ் சாரலும் தவழும் மலைப் பக்கங்கள்
    அரவம் அறா ஓசை இல்லாது இருக்கும் இடமும்
    செஞ்சந்தனத்தின் வேரும் சிவந்த சந்தன மரங்களின் வேர்
    அரவம் அறா பாம்புகள் இல்லாது இருக்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நேரும் மது கையிடவர் கறுத்தார் எதிர்த்த மது கைடபர்களை கோபித்து அழித்தவரும் ,
    மதுகை இடவர்க்கு வலிமையுள்ள எருது வாஹனம் உடைய சிவனுக்கு
    மாமலரோன் சாபம் தாமரையில் இருக்கும் பிரமனின் சாபத்தை
    அறுத்தார் நீக்கினவருமான திருமால்
    வாழ்வு வாழுமிடம் ஆகும்

    V.Sridhar
Working...
X