Announcement

Collapse
No announcement yet.

ஐயர் சீமந்தம் உதகசாந்தி விவரம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஐயர் சீமந்தம் உதகசாந்தி விவரம்.

    பும்ஸவனம்;---2 அல்லது 3 அல்லது 4வது மாதத்தில் கர்பம் அசைய ஆரம்பிபதற்கு முன் பும்ஸவனம் என்ற ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் .புருஷ குழந்தையாகவே பிறக்க வேண்டும் என்பது அதன் பொருள். நமது ப்ரார்த்தனை .இது. கர்ம விதிப்படி பிறக்கும்.

    சுக்ல பக்ஷத்தில் கடகம், மிதுனம், கன்னி இவைகளை தவிற மற்ற லக்னங்களில் அஷ்டம சுத்தி யுள்ள ராசியில் ரிக்தையில்லாத திதி , திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் பும்சவனம் செய்ய வேன்டும்.

    6 அல்லது 8 வது மாதத்தில் செய்ய வேண்டியது ஸீமந்தோந்நயனம் எனும் கர்மா.. 4 அல்லது, 6 அல்லது 8 ஆவது மாதத்தில் அஷ்டம சுத்தியான லக்னத்தில் (சுப கிரஹங்களும் இருக்க கூடாது). சிம்மம், வ்ருச்சிகம்

    ராசிகளை தவிற மற்ற ராசிகளில் ரிக்தைகள், அமாவாசை. பெளர்ணமி, தவிற
    மற்ற திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில், சந்திராஷ்டமும் இல்லாமல் பெண் நக்ஷதிரத்திலிருந்து பார்க்க வேண்டும்.


    குரு, சுக்ர பலம் நல்லது. . கசரம் இல்லாமல் நாள் பார்க்க வேண்டும்.
    ரோஹிணி, ம்ருகசீர்ஷம்,, புனர்பூசம், பூசம், உத்ரம், ஹஸ்தம், உத்ராடம், திருவோணம், உத்ரட்டாதி, ரேவதி நக்ஷத்திரங்களில் நாள் பார்க்க வேண்டும்.

    துதியை த்ருதியை, பஞ்சமி ,ஸப்தமி தசமி ஏகாதசி, த்ரயோதசி திதிகள் நல்லது.

    ஸீமந்தம் எனும் கர்மாவை செய்து கொள்ளும் கர்பிணியின் தலை மயிரை
    முள்ளம்பன்றி முள்,, தர்ப்பை,, பேத்தி இலை கொத்து ஆகியவைகளால் வகிடாக பிறிப்பதால் ஸீம்சதோன்நயனம் என இதற்கு பெயர்..

    இதற்கு பூர்வாங்கம் உதக சாந்தி, ரக்ஷாபந்தனம், நாந்தி. . பிறகு ஒளபாசன
    அக்னியில் முகாந்தம் செய்ய வேண்டும். பாத்ர ஸாதனத்துடன் வகிடு

    பிறிக்க தர்ப்ப ஸ்தம்பம், பன்றி முள், பேய் அத்திக்கொத்து, முளையுடன் கூடிய நெல் பயிர், இவைகளையும் ஸாதனம் செய்ய வேண்டும்.

    ஆஜ்ய பாகம் ஆன பின் , பும்ஸவனத்தில் கூறபட்ட தாதா முதல் உக்த உக்தே என்ற வறை உள்ள எட்டு மந்திரங்களாலும் ஹோமம் செய்ய வேண்டும்.பிறகு உத்ராங்கமாக ஜயாதி ஹோமம், அனாக்ஞாதம் முதலான

    ப்ராயஸ்சித்த ஹோமம் ஆனபின் , ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை கொடுத்து அனுப்பிவிட்டு , க்ருஹ ப்ரீதி செய்து அக்னிக்கு பின் புறத்தில் கிழக்கு முகமாக மனைவியை உட்கார வைத்து புருஷன் மேற்கு முகமாக நின்று

    பன்னிமுள் முத்லியவற்றை க்கொண்டு கீழ் வரும் அர்த்தமுள்ள இரு மந்திரங்களால் நாபியிலிருந்து தலை வகிடு வறை உடலை

    தொட்டுக்கொண்டே சென்று வகுட்டை பிறித்து , பன்னி முள் முதலியவைகளை பின்னால் எறிந்து விடவும்.

    ப்ராஹ்மண ஸ்த்ரீகள் எல்லோருக்கும் ஸோமனே ராஜா. முளையுடன் கூடிய நெல் பயிறை மெல்லிய நூலில் கட்டி அதை கர்பிணியின் சிரஸில் கட்டி , நக்ஷத்திரம் உதயமாகும் வரை மெளனமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.

    நக்ஷத்திரம் உதயமான பின் கன்றுக்குட்டியை பின் தொடர்ந்து , வ்யாஹ்ருதிகளை ஜபித்து கிழக்காவது, வடக்காவது சென்று மெளனத்தை விட வேண்டும்.. பிறகு ஸத் புத்ரன் பிறக்க வேண்டும் என,

    உமா மஹேஸ்வரராக, லக்ஷ்மி நாராயணனாக எண்ணி, ப்ராஹ்மணர்களுக்கு
    பலதானம் செய்து, அக்னி உபஸ்தானம்,, அக்ஷதை ஆசீர்வாததுடன் ஸீமந்தோன்னயனம் பூர்ணமாகிறது.

    கிராமங்களில் தான் பேத்தி இலை கிடைக்கும். கிராமத்தில் தான் நெல் முளைகளை சிரஸில் கட்டி மாலை வரை மெளனமாக இருக்க முடியும்.
    ஆதலால் நகரங்களில் இதை செய்வதில்லை.

    வீணை டி.வி.டி. சி.டி. போட்டு வீணா கானம் கர்பிணி கேட்க வேண்டும்..

    பும்ஸவனம் மற்றும் சீமந்தம் இரண்டும் சேர்த்து செய்யலாம் என ரிஷிகள் கூறியதால் தற்போது இரண்டும் சேர்த்து செய்கிறார்கள்.

    வளைகாப்பு, மற்றும் பூச்சூட்டல்.., என்பது சிஷ்டாசார வகையில் வந்து பெண் மக்கள் சேர்ந்து செய்யும் லெளகீக கர்மா.. கர்பிணி பெண்ணின் துணையாக மற்றொரு பெண்ணையும் உட்கார்த்தி இருவருக்கும் கையில் வளையல்

    அடுக்குகிறார்கள். முதலில் வேப்ப இலைகளை பறித்து வந்து இலைகளை பிய்த்துவிட்டு நரம்பை வளையல் மாதிரி செய்து முதலில் போடுகிறார்கள்.
    தலையிலும் வேப்பிலை வைக்கிறார்கள்..
    பிறகு வீட்டிலுள்ள மற்றபெண் உறவினர்களுக்கும் வளையல் போடுகிறார்கள்..

    பிறகு கர்பினி பெண்ணை மேற்கு பார்த்து நிற்க வைத்து உடலில் தலையில். தோள் பட்டையில். இடுப்பில், கால்களில் ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து மற்ற பெண் மணிகள் . கற்பூரம் கொளுத்தி தலையிலிருந்து கால்

    வரையிலும் . காலிலிருந்து தலை வரையிலும் மூன்று முறை கர்பிணி பெண்ணிற்கு சுற்றி த்ருஷ்டி கழிக்கிறார்கள். . நல்ல வாசனை பூக்கள் கர்பிணி பெண் தலையில் வைக்கிறார்க்கள். கர்நாடக ஸங்கீதம் பாடுகிறார்கள்..

    குல தெய்வ கோவிலுக்கும் , வளயல் எடுத்து தனியாக வைத்துக்கொண்டு பிறகு குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது குல தெய்வத்திற்கு. கொடுக்கிறார்கள். . வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோவிலுக்கும் வளயல் கொடுக்கிறார்கள்..
Working...
X