Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 095/104 : வேங்கடமே உந்திக் கமலத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 095/104 : வேங்கடமே உந்திக் கமலத




    கூட்டுத் தவத்தரும் கோளரிகளின் தொகையும் ,
    வேட்டு வரம்பொழியும் வேங்கடமே - மோட்டுமதத்-
    தந்திக்கமலத்தார் தாம் பெறூஉம் வீடு அளித்தார்
    உந்திக்கமலத்தார் ஊர்




    வேட்டு வரம்பொழியும் - வேட்டு + வரம் + பொழியும்
    வேட்டு வரம்பொழியும் - வேட்டுவர் + அம்பு + ஒழியும்
    தந்திக்கமலத்தார் - தந்திக்கு + அமலத்தார்
    உந்திக்கமலத்தார் - உந்தி + கமலத்தார்



    கூட்டுத் தவத்தரும் தவத்தை அதிகமாக செய்யும் முனிவர்கள்
    வேட்டு வரம் பொழியும் விரும்பி , அன்பர்களுக்கு வரங்களை அளிக்கும் இடமும் ,
    கோளரிகளின் தொகையும் வலிமையான சிங்கங்கள்
    வேட்டுவர் அம்பு ஒழியும் வேடர்களின் அம்பை திறமையாக தவிர்க்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    மோட்டு மத தந்திக்கு உயர்ந்த மத யானையான கஜேந்திரனுக்கு
    அமலத்தார் தாம் நிர்மலமான ஞானிகள்
    பெறூஉம் வீடு பெறுவதற்கு உரிய மோக்ஷத்தை
    அளித்தார் கொடுத்தவரும் ,
    உந்திக் கமலத்தார் நாபியில் தாமரையை உடையவருமான திருமாலின்
    ஊர் திருப்பதி ஆகும்


    V.Sridhar

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 095/104 : வேங்கடமே உந்திக் கமல&#2

    நன்றி தமிழ்க்கவியே உம் செயலால் யாமும் சிறிது நல்லதமிழ்க் கற்கிறோம்

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 095/104 : வேங்கடமே உந்திக் கமல&am

      தமிழ்க் கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தான் ! அவருக்கு நன்றி !

      Comment

      Working...
      X