Announcement

Collapse
No announcement yet.

கூட்டு பொடி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கூட்டு பொடி

    இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி நாங்க் வீட்டுல “பொரித்த கூட்டு ” செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.

    தேவயானவை:

    உளுந்து 1 கப்
    மிளகாய் வற்றல் 20 – 25
    ஒரு துளி எண்ணை

    செய்முறை:

    துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
    மிக்சி இல் அரைக்கவும் .
    தேவயான போது உபயோகப்படுத்தவும்.

    உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
    ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
    கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
    அவ்வளவு தான் கூட்டு ரெடி.
    ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.

    குறிப்பு: தேங்கை துருவலை நான்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்கும் முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X