Announcement

Collapse
No announcement yet.

Tips:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tips:

    Tips:

    * போளி தட்டும்போது வாழையிலையின் பின்பக்கமாகத் தட்டினால் மெல்லியதாக வரும் .

    information

    Information

    * ஊறுகாய் கிண்ணத்தில் ஸ்பூனுக்குப் பதிலாக சிறிய ஃபோர்க்குகளை உபயோகிக்கலாம் . இதனால் ஊறுகாயுடன் என்ண்ணெயும் சேர்ந்து வாராமல் ஊறுகாயிலேயே தங்கிவிடும் .
    * நாம் தினசரி உபயோகிக்கும் சர்க்கரை பாட்டிலில் எறும்பு வந்துவிட்டால், வெங்காயம், உருளைக்கிழங்கு வைத்திருக்கும் தட்டில் பாட்டிலைத் திறந்து வைத்துவிடுங்கள் . சில மணி நேரங்களில் எறும்பெல்லாம் மாயமாய் மறைந்து போயிருக்கும் .
    * தரையில் எலுமிச்சைச் சாறு பட்டு தரை வெள்ளையாக மாறியிருந்தால், அதன் மீது பூசணிக்காயை நறுக்கி தேய்க்கவும் . கறை உடனடியாக நீங்கிவிடும்





    * தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்து, சேர்த்து அரைக்கவும் . வாசனையாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகும் .

    * சுவாமி படங்களைக் கண்ணாடி ஃப்ரேம் போடாமல், லேமினேஷன் செய்வதுதான் நல்லது . பூச்சி அரிக்காது . துடைப்பதும் சுலபம் . வெளியூர் மாற்றலாகிப் போகும்போது உடையாமலும் இருக்கும் . அதிக எடையும் இருக்காது .

    * கடையில் வாங்கும் சுண்டைக்காய் வற்றலை, தண்ணீரில் போட்டு அலசவும் . பிறகு, புளித்த மோரில் ஊற வைத்துக் காய வைத்து வறுத்தால், அபார ருசி கிடைக்கும் . அதிகப் படியான உப்பும் தண்ணீரில் போய்விடும் .
Working...
X