Announcement

Collapse
No announcement yet.

ராமானுச நூற்றந்தாதி 002/111 தனியன் 2/3 : அந்தாதி ஓத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமானுச நூற்றந்தாதி 002/111 தனியன் 2/3 : அந்தாதி ஓத




    நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர் பால்
    சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாள் இணை மேல்
    உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
    இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே



    நெஞ்சமே மனமே !


    நயம் தரு பேரின்பம் எல்லாம் உலக விஷயங்கள் தரும் சுகம் எல்லாம்

    பழுது என்று நண்ணினர் பால் அற்பமானவையே என்று அறிந்தவர்களுக்கு
    சயம் தரு அவைகளை வெல்லும் சக்தி அளிக்கும்
    கீர்த்தி இராமானுச முனி புகழ் பெற்ற இராமானுஜ முனிவரின்
    தாள் இணை மேல் திருவடிகளின் மேல்
    ஓங்கும் அன்பால் பொங்கும் பக்தியால்

    உயர்ந்த குணத்து உயர்ந்த நற்குண்கள் நிறைந்த
    திருவரங்கத்தமுது திரு அரங்கத்து அமுதனார்
    இயம்பும் கலித்துறை அந்தாதி அருளிச் செய்த கலித்துறை அந்தாதியை


    ஓத இசை விரும்பிக் கற்றுக்கொள்




    V.Sridhar




Working...
X