Announcement

Collapse
No announcement yet.

ராமானுச நூற்றந்தாதி 005/111 இராமானுசன் சீலம் ம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமானுச நூற்றந்தாதி 005/111 இராமானுசன் சீலம் ம

    [link]ராமானுச நூற்றந்தாதி 005/111 இராமானுசன் சீலம் மட்டும் என் நெஞ்சு உள்ளும் ! [/link]

    கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
    கொள்ளா மனிசரை நீங்கி , குறையல் பிரான் அடிக்கீழ்
    விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
    உள்ளாது என் நெஞ்சு , ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே



    கள் ஆர் பொழில் தேன் நிரம்பிய சோலைகள் கொண்ட

    தென் அரங்கன் திரு அரங்கத்தில் இருக்கும் திருமாலின்
    கமலப் பதங்கள் திருவடித் தாமரைகளை
    நெஞ்சில் கொள்ளா மனதில் நினையாத
    மனிசரை நீங்கி மனிதர்களைச் சேராதவரும் ,
    குறையல் பிரான் குறையலூரில் அவதரித்த திருமங்கை ஆழ்வாரின்
    அடிக்கீழ் திருவடிகளில்
    விள்ளாத அன்பன் குறையாத பக்தி கொண்டவருமான
    இராமானுசன் இராமானுஜ முனிவரின்
    மிக்க சீலம் அல்லால் உயர்ந்த குணங்களைத் தவிர எதையும்
    உள்ளாது என் நெஞ்சு என் மனம் நினையாது ;
    எனக்கு உற்ற தாழ்ந்த எனக்கு கிடைத்த
    பேர் இயல்வே இந்தப் பெரும் பேற்றைப் பற்றி
    ஒன்று அறியேன் ஒன்றும் தெரியவில்லை

    -
    V.Sridhar
    Last edited by sridharv1946; 16-04-14, 20:14.
Working...
X