Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா

    ஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா!
    (எழுதியவர்: பிரம்மஸ்ரீ. நீர்வை. தி. மயூரகிரி சர்மா)


    சிலப்பதிகாரச் செல்வி! அற்புதங்களின் தாய்! கற்பிற்கரசி! தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை.
    இவ்வாறான பல ஊர்களில் கண்ணகிக்கு கோபுரம், ப்ரகாரங்களோடு ஆலயமிருக்கிறது. திருத்தேர் பவனியும் பல இடங்களில் உண்டு. ஆறுமுக நாவலர் போன்றவர்களின் ஆகம வழி அலையால் சிறுதெய்வம் என்று புறக்கணிக்கப்பட்டு பெயர் மாற்றம் – உரு மாற்றம் பெற்ற போதும் இன்றும் அவற்றை எல்லாம் தாண்டி நிமிர்ந்து நிற்கும் சிறப்புடைய கண்ணகி ஆலயங்கள் பல உண்டு.
    வைகாசியில் விழாக் கோலம் காணும் இந்த ஆலயங்களை இன்றைக்கும் ஈழமெங்கும் காணலாம். இன்னும் இலங்கையில் வாழும் சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்று போற்றும் படியாகவும் ஜாதி பேதமின்றி யாவரும் வணங்கும் நாயகியாகவும் கண்ணகா விளங்குகின்றாள்.


    இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..
    ஸ்ரீ கண்ணகீ நவரத்ன மாலா
    மாணிக்யஸி²ஞ்ஜினீஹஸ்தாம்ʼ **
    மானாயகஸுதாம்ʼ வராம்|
    மஹாஸத்த்வஸ்னுஷாம்ʼ த⁴ன்யாம்ʼ
    மாதரம்ʼ கண்ணகீம்ʼ ப⁴ஜே ||
    01
    கனக விஜய சிரோத்ருத
    கங்கா தீர்த்த அபிஷிக்தாம்
    கஜபாஹ_ ராஜ சேவிதாம்
    காளீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    02
    சோழ தேசோத்பவாம் தேவீம்
    சேர வம்ச குல பூஜிதாம்
    சுர ஸ்துத்யாம் ஆதிசக்தீம்
    சௌந்தரீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    03
    மதுரா நகர தாஹினீம் சிவாம்
    மாதர்யா: பரிபாலிதாம் குமாரீம்
    கிராத நிர்மித ஸ்தல வாஸினீம்
    மயூரீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    04
    செங்குட்டுவ ராஜ வந்த்யாம்
    ஸர்வ ரோஹ நிவாரணீம்
    கவுந்தீபாலிதாம் கருணா மயீம்
    வீரபத்னீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    05
    பீஜக விருக்ஷ சாயாஸ்திதாம்
    பராசக்திஸ்வரூப நாயகீம்
    காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
    பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    06
    ஆகாச மார்க்க காமினீம்
    ஆனந்த சாகர ஸ்வரூபிணீம்
    ஆச்சர்ய சரித்திரமயீம் காமாக்ஷீம்
    அம்பிகாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    07
    கோவல நாயகீம் தேவீம்
    ஹம்ஸானந்தீம் சௌந்தரீம்
    ஹிமாசல சிலோத்பூதாம்
    கல்பனாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    08
    இந்திர வந்த்யாம் இஷ்டதாம்
    இளங்கோ கவிராஜ வந்த்யாம்
    சுந்தரீம் ஸர்வ சம்பத்ப்ரதாம்
    சரஸ்வதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    ஸ்ரீ மாதா கண்ணகா நவரத்ன மாலா விளக்கவுரை


    1. மாணிக்கச் சிலம்பு ஏந்திய திருக்கரங்களை உடையவளை (இணை அரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்), மாநாய்க்கன் என்ற வணிகர் தலைவனின் புதல்வி (மாநாய்கன் குலக் கொம்பர்), மாசாத்துவன் என்ற வணிகனின் புதல்வனான கோவலனின் மனைவியானவள் (மாசாத்து வணிகன் மகனேயாகி…. கோவலன் மனைவி), கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்றவள், இவ்வாறான அன்னை திருவுடை கண்ணகையை வணங்குகின்றோம்
    2. கனகன், விஜயன் என்ற வடநாட்டு அரசர்கள் தங்கள் தலையில் சுமந்து வந்த தூயகங்கா நீரால் திருமுழுக்குச் செய்யப்பெற்ற சிறப்புடையவள் (அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக்கல் சுமத்தி.. கங்கைப் பேர் யாற்றிருந்து, நங்கை தன்னை நீர்ப்படுத்தி…) இலங்கை அரசனான கயவாகு என்பானால் வழிபடப்பெற்று இலங்கையிலும் பிரபல்யம் செய்யப்பெற்ற பெருமையினள் (கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள்பலி- பீடிகைக் கோட்டம் முந்துறுத்து) காளியைப் போல கயமை களையும் பாங்கினள் (சூர் உடை கானகம் உகந்த காளி) இத்தகு அன்னை திருவுடை கண்ணகையை வணங்குகின்றோம்.
    3. சோழ நாட்டில் அவதரித்தவள், சேரர்களால் பகவதி என்று புகழ்ந்து வழிபாடாற்றப்பட்டவள், தேவர்களால் போற்றப்படுபவள்.. ஆதிசக்தியான பார்வதியின் அம்சமானவள், அழகில் தன்னிகர் இல்லாதவள் (போதில் ஆர் திருவினாள், புகழ் உடை வடிவு என்றும், தீது இலாத வடமீனின் திறம் இவள் திறம் என்றும்) ஆகிய அன்னை திருமிகு கண்ணகியை வணங்குகின்றோம்
    4. மதுரையை சினம் கொண்டு எரித்தவள், பரசிவனைப் போன்ற அன்னை, மாதரி என்பவளால் பாதுகாக்கப்பட்டவள்,(ஆயர் முதுமகள் மாதரி என்போள்.. தீதறு செய்தனள்) என்றும் குமரியாகத் திகழ்பவள், வேடர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் மகிழ்வோடு வசிப்பவள், (குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார், இவள் போலும் நங்குலக்கோர் இருந் தெய்வம் இல்லை) மயிலைப் போல அழகு பொருந்தப் பெற்றவள் ஆகிய அன்னை திருமிகு கண்ணகியை வணங்குகின்றோம்.
    மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றுகந்த
    கோமகளும் தாம் படைத்த கொற்றத்தாள்இ- நாம
    முதிரா முலை குறைத்தாள், முன்னரே வந்தாள்
    மதுரா பதி என்னும் மாது
    5. செங்குட்டுவ அரசனால் வணங்கி வழிபடப்பெற்றவள், எல்லா நோய்களையும் துக்கங்களையும் நீக்க வல்ல தெய்வத்தன்மை பொருந்தப் பெற்றவள். கௌந்தியடிகளால் பாதுகாக்கப்பட்டவள். கருணைக்கடலாக நின்று நாம் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வல்லவள்… வீர பத்தினி என்று கொண்டாடப்படுபவள் (இலங்கையில் சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள் இவ்வன்னையை ‘பத்தினி தெய்யோ’ என்று பக்தியோடு பூஜிக்கிறார்கள்) அத்தகு அன்னை ஸ்ரீ கண்ணகியை வணங்குகின்றோம்..
    6. வேங்கை மர நிழலில் பராசக்தி வடிவமாக.. தெய்வீக உருவெடுத்தவள், (பூத்த வெங்கைப் பூங்கற்கீழ்…. வான ஊர்தி ஏறினள் மாதோ- கானமர் புரி குழல் கண்ணகி –தான்- என்) காவிரிப் பூம்பட்டினத்தினை தன் சொந்த ஊராகக் கொண்டவள், (பெரும் பெயர்ப் புகார் என் பதியே) பகவதியாகிய அன்னை கண்ணகியை வணங்குகின்றோம்..
    7. வானவழிச் சென்ற அன்னை, மகிழ்ச்சிக் கடலானவள், தன்னை வணங்குவொருக்கு சதா சந்தோஷம் தருபவள், ஆச்சர்யமான வரலாற்றைக் கொண்டவள் (ஒரு மார்பிழந்த திருமா பத்தினி) .. காமாக்ஷியாக விளங்குபவள்… (காமாக்ஷி என்றால் அன்பு பொருந்திய கண்களை கொண்டவள் என்பது பொருள்… கண்ணகை என்றாலும் இவ்வகைப் பொருள் கொள்ள வல்லதாயிருக்கிறமை கண்டனுபவிக்கத்தக்கது… சிலப்பதிகாரத்தில் காமகோட்டம் பேசப்பட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கது.) இவ்வாறான அன்னை கண்ணகியைப் போற்றுகின்றோம்.
    8. கோவலனின் தர்மபத்தினி, அன்னம் போல விளங்குபவள் (அன்னப்பறவை பாலை எடுத்து நீரை விடுமாப் போல தன் அடியவர்களின் குறைகளை நீக்கி குணங் கொண்டு அருள்பவள்), பேரழகின் திருவுடையாள் இமயமலையில் சிலை உருவம் பெற்றவள்.. (செங்குட்டுவன் இமயமலையில் கல்லெடுத்துக் கண்ணகிக்கு சிலை அமைத்தான் என்பது வரலாறு)… கற்பகம் போல கருணை சுரப்பவள்.. இத்தகு அன்னை கண்ணகையைப் போற்றுகின்றோம்..
    9. இந்திரனால் வணங்கப்பட்டவள் (அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த) இளங்கோ என்ற கவியரசரால் சிலப்பதிகார காவியம் பாடிப் போற்றப்பட்டவள் (சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்.. என முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக) எப்போதும் அழகு பொருந்தப்பெற்றவள், எல்லா வித இன்பங்களும் அளிப்பவள், சரஸ்வதி போல நின்று சர்வ கலை கல்வி ஞானம் கொடுப்பவள், இத்தகு திருமிகு அன்னை கண்ணகையைப் போற்றுகின்றோம்..
    மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
    விண்ணக மாதர்க்கு விருந்து –சிலப்பதிகாரம்
    குறிப்பு- இங்கே சிலப்பதிகாரப் பாடல் வரிகள் சில எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்க.
    எழுதியவர்:
    பிரம்மஸ்ரீ. மயூரகிரி சர்மா
    நீர்வேலி
    யாழ்ப்பாணம்.
    —-
    குறிப்பு:
    ** இந்த சுலோகத்தை எழுதிய ஸ்ரீ. மயூரகிரி சர்மா அவர்களின் பாடம்:
    மாணிக்க நூபுர ஹஸ்தாம்
    மாநாய்க்க வைஸ்யராஜ கந்யாம்
    மாசாத்வ சுத நாயகீம் கல்யாணீம்
    மாதாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!
    இதில் மாதாம் என்ற பிரயோகம் தவறென்று முனைவர். சங்கரநாராயணன் அவர்கள் திருத்திய வடிவத்தை மேலே கொடுத்துள்ளோம். அவரே தந்த இன்னொரு பாடம்:
    மாணிக்யமஞ்ஜீரலஸத்கராட்⁴யாம்ʼ மானாயகப்ராணஸுதா⁴ம்ʼ வராங்கீ³ம்|
    மாஸத்த்வபுத்ரப்ரியகல்பவல்லீம்ʼ ஸ்ரீகண்ணகீம்ʼ நௌமி க்ருʼபாம்பு³ராஸி²ம்||
Working...
X