Announcement

Collapse
No announcement yet.

பிரமிடுகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிரமிடுகள்

    பிரமிடுகள் உலக அதிசயம் மட்டுமல்ல ; உலகின் காஸ்ட்லியான பொருள்கள் திருடப்படும் இடமும்கூட ! எகிப்திய மன்னர்கள் இறந்த பின், அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், கட்டில், கைத்தடி என எல்லாப் பொக்கிஷங்களையும் உள்ளே வைத்துப் பிரமிடு கட்டினார்கள் . திருடர்களுக்கு பிரமிடுகள் என்றால் சொர்க்கம் . மம்மிகளைச் சுற்றி இருக்கும் லினன் துணிகள்கூட விலை போகும் . மம்மி போட்டு இருக்கும் தங்க முகமூடி, நகை, மோதிரம் எல்லாமே அதைவிட அதிகமாக விலைபோகும் . ஒரே திருட்டு... 'ஓஹோ'ன்னு வாழ்க்கை . கும்பல் கும்பலாகப் பிரமிடுக்குள் புகுந்தார்கள் திருடர்கள் . டுட்டன் காமென் கல்லறையை மட்டும்தான் விட்டுவைத்தார்கள் . பிரமிடுக்குள் நுழைவதும், வழி கண்டுபிடிப்பதும் சவாலான விஷயம் . பெரும்பாலான மன்னர்களின் கல்லறை பூமிக்கு அடியில் இருக்கும் . அதற்கு மேல் பொய்யாக ஒரு கல்லறை இருக்கும் . ரொம்பக் கனமான கதவுகளைத் திறந்தால் மேலே தொங்கும் பெரிய கல் விழுந்து நசுக்கிவிடும் . கல்லறைக்கு அருகே குழிகள் மூடி இருக்கும் . கால்வைத்தால் கபாலமோட்சம்தான் . இத்தனையையும் தாண்டி எல்லா பிரமிடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டார்கள் திருடர்கள் . ' இதுவரை பிரமிடுகளில் குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொக்கிஷங்கள் திருடு போயிருக்கும் ' என்று கனக்குச் சொல்கிறது எகிப்து அரசு .
    --- கார்த்திகா, களவு விகடன் , இணைப்பு . 24. 03. 2010 .
    Posted by க. சந்தானம்
Working...
X