Announcement

Collapse
No announcement yet.

மனைவி சொல்படி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனைவி சொல்படி

    மனைவி சொல்படி ஆட்சி நடத்திய ஒரு ராஜாவுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது . நம்மை மாதிரி எல்லோரும் மனைவி ஆலோசனைப்படி நடக்கிறார்களா ? என்று சோதிக்க ஆசைப்பட்டார் . நாட்டின் தளபதியை அழைத்து கருத்து கேட்டார் . அமைச்சரை அழைத்து பேசினார் . எல்லோரும் ' உங்க பாதையில் நாங்களும் செல்கிறோம் ' என்று பதில் சொன்னார்கள் .
    திருப்தி ஏற்படாத மன்னர் ' நாட்டின் குடிமகன்களை அழைத்து இதுபற்றி கேட்டார் . மனைவி சொல்படி நடக்கிறவர்கள் ஒரு பக்கம் நில்லுங்கள் . மனைவியிடம் ஆலோசனை கேட்காதவர்கள் மறுபுறம் நிற்க வேண்டும் என்று உத்தரவு போட்டார் . ஒரே ஒருவரைத் தவிர , மற்றவர்கள் அனைவரும் மனைவி சொல்படி நடக்கிறோம் என்று வரிசையில் நின்றார்கள் .
    அட , ஒருவராவது சொந்தமாக சிந்தித்து நடக்கிறாரே ? அவருக்கு பரிசு வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜா , அவரை அழைத்து பேசினார் . ' எப்பவுமே கூட்டத்தோடு நிற்காதீங்க .... தனியாக நில்லுங்க 'னு என் மனைவி சொல்லியிருக்கிறார் ... அதான் , தனியே நின்னேன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் அந்த நபர் ... சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டார் ராஜா .
    --- தமிழக துணை அமைச்சர் , மு. க. ஸ்டாலின் . சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் சுய உதவி குழுவில் .
    --- தினமலர் ,13 03. 2010 .
Working...
X