Announcement

Collapse
No announcement yet.

யஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்

    10-08-2014 ;_ ஞாயிறு,. காமோகாரிஷீத் ஜப ஸங்கல்பம்..


    இது தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் ருக் வேதிகளுக்கும் கிடையாது.ஆசமனம்.- மோதிர விரலில் பவித்ரம் ,2 தர்பை தரித்து காலின் கீழ் இரு தர்பைகளை போட்டுக்கொண்டு ஸங்கல்பம் தொடங்கவும்.

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே. ஓம் பூஹு , ஓம் புவஹ, ஓம் ஸுவஹ;ஓம் தமஹ ஒம்தபஹ; ஒகும் சத்யம்,


    மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
    சுபே சோபனே முஹூர்தே ஆத்ய ப்ருஹ்மணஹ, : த்வீதிய பரார்த்தே .ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே

    கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹண சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

    ((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்) –விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்த்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்தே மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிண்யாஹா யமுநாயாஹா, பச்சிமே தீரே பார்ஹஸ்பத்ய மானேன
    சோபக்ருத் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்துக்கொள்ளவும்.

    ஸெளர சாந்த்ரமானாப்யாம் ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள வாஸரஹ பானு வாஸர யுக்தாயாம் சிரவண நக்ஷத்திர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக

    பத்ர கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சிராவண்யாம் பூர்ணிமாயாம்

    அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் அஷ்டோத்தர சத ஸங்க்யயா காமோகாரிஷீத் மன்யூரகாரிஷீத் மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.
    என்று ஸங்கல்பம் செய்யவும். தர்பத்தை வடக்கில் போடவும்.ஜலத்தை தொடவும்.

    ப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
    பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம

    காச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய; சந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;

    பத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.

    ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ
    ஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

    ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.
    முடிய சொல்லி காமோகாரிஷீன் மன்யூரகாரிஷீன் நமோ நம: என்று 108 தடவை சொல்லி முடிவில் ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரே தேவி

    பூம்யாம் பர்வத ரூபிணி ப்ராஹ்மணே ப்யோ ப்யநுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.என்று உபஸ்தானம் செய்யவும் .நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை எடுத்து அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

    11-08-2014 திங்கள் காயத்ரி ஜப ஸங்கல்பம்.. ரிக்,யஜுர், ஸாம வேதிகளுக்கு.


    மோதிர விரலில் தர்பை பவித்ரம் தரித்து , காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கொண்டு பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும்.

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
    ஓம்பூஹு++++++===பூர்புவஸ்ஸுவரோம்.

    மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; துதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே

    ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ஜய நாம

    ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸோம வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சோபந நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் , ப்ரதமாயாம் சுப

    திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவஸ்து அபதனீய ப்ராயஸ்சித்தார்த்தம் , ஸம்வத்சர அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் அஷ்டோத்திர

    ஸஹஸ்ர சங்கியயா காயத்ரீ மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பை புல்லை வடக்கில் போடவும்..ஜலத்தை கையால் தொடவும்.

    ப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
    பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம
    காச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய;

    சந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;
    பத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.

    ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ

    ஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

    ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.
    1008 தடவை காயத்ரி ஜபம் செய்யவும்.( ஓம்---பூர்புவஸ்ஸுவஹ---தத்ஸ விதுர்வரேண்யம் ---பர்கோ தேவஸ்ய தீ மஹி----தியோயோனஹ ப்ரசோதயாத்.) முடித்தவுடன் ப்ராணாயாமம் செய்து உபஸ்தானம் செய்யவும்.

    உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ப்யனுஜ் ஞானம் கச்ச தேவி யதா சுகம். நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்..

    தலை ஆவணி அவிட்டத்திற்கு தேவையான சாமான்கள் மற்றும் காயத்ரி ஹோமத்திற்கு தேவையான சாமான்கள்.

    மஞ்சள் தூள். 100 கிராம்.; குங்குமம் 10 கிராம்.; சந்தனம் 10 கிராம். மஞ்சள் கிழங்கு 50 கிராம்.; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; பூவன் வாழைப்பழம். 10;

    புஷ்பம் தொடுத்தது 4 முழம்.; உதிரி புஷ்பம், துளசி 200 கிராம்; ஊதுபத்தி 10 குச்சி.; கற்பூரம் 20 கிராம்; மஞ்சள் அக்ஷதை 25 கிராம்; ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரப்பொடி 5 கிராம்; வாழை நுனி இலை 4; கோதுமை ஒரு கிலோ;.

    பச்சரிசி 1 கிலோ. நெய் 500 கிராம்; தேங்காய் 2; பஞ்ச பாத்திர உத்திரிணி;.; சொம்பு—2; கும்ப வஸ்திரம் 3 முழ துண்டு ஒன்று. ஹோமம் பண்ண கிண்ணம் -6; குத்து
    விளக்கு 2; இதற்கு நல்ல எண்ணெய்; திரி. தீப்பெட்டி; விராட்டி 10; சுள்ளி ஒரு கிலோ; ;பலகை

    அல்லது தடுக்கு 2; செங்கல்10; மணல் 2 கிலோ; அல்லது ஹோம குண்டம்; ஹாரத்தி கரைசல்; நாந்தி 10 பேருக்கு அனுக்ஞை; வாத்யார் சம்பாவனை; அரச மர குச்சி அல்லது புரச மர குச்சி 1200;;

    அப்பம்; சுண்டல் நைவேத்யத்திற்கு.;பால் 500 மில்லி;

    யஜுர் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை: 1. ஸ்நானம்; ஸந்தியா வந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிக்கு; 3. சமிதாதானம் ப்ருஹ்மசாரிக்கு;ஒளபாசனம் கிருஹஸ்தர்களுக்கு; 4.காமோகாரிஷீத் மந்த்ர

    ஜபம்(( முதல் வருட பையனுக்கு கிடையாது)5. மாத்யானிகம்; ப்ருஹ்ம யஞ்யம்; 6. ஸ்நானத்துக்கு மஹா ஸங்கல்பம்; 7. முறையாக ஸ்நானம் செய்தல்; 8. புதிய பூணூல் போட்டு கொள்ளூதல்; 9. காண்டரிஷி தர்பணம்.

    10.வேத வ்யாஸ காண்டரிஷி பூஜை 11.உபாகர்மா ஹோமம் ;12. அனுக்ஞை நாந்தீ ச்ராத்தம் முதல் வருட பையனுக்கு; 14. வேதராம்பம், வேத அத்யயனம் நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

    ருக் வேதிகளுக்கு சாகாதீசனான குரு பகவான் மெளட்யத்திற்கு பிறகு 15 நாள் பால்யாவஸ்தையில் இருப்பதால் ருக் உபாகர்மா செய்ய கூடாது என்று உள்ளதால் “”அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே

    வ்யவஸ்தயா என்று சொல்ல பட்டதால் பாத்ர பத சிரவணத்தில் செய்யும் படி சொல்லி உள்ளதால் உதய காலத்திலிருந்து 2 நாழிகை முழுமையாக

    உள்ள ச்ரவண நக்ஷத்திரத்தில் செய்யும் படி உள்ளதால் இந்த வருடம் ஆவணி 22ந்தேதி ( 7-9-14 )அன்று ருக் உபாகர்மா அநுஷ்டிக்க வேண்டும்.

    ரிக் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை.

    1. ஸ்நானம் ஸந்தியாவந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிகளுக்கு; 3. ஸமிதாதானம் ப்ருஹ்மசாரிகளுக்கு. ஒளபாஸனம் கிரஹஸ்தர்களுக்கு.
    4. மாத்யானிகம், ப்ருஹ்மயக்ஞம். 5. உத்ஸர்ஜனம், புண்யாஹ வசனம்;

    6. மஹா ஸங்கல்பம், அவப்ருத ஸ்நானம்; 7. தேவ ரிஷி பித்ரு தர்பணம். 8. உபக்ரம ஹோமம். 9. யக்ஞோப வீத ஹோமம். 10. தயிர், ஸத்து மாவு ப்ராசனம்

    .11. புதிய பூணல் அணிதல். 12. அனுக்ஞை நாந்தி சிராத்தம் முதல் வருட பையனுக்கு.13. வேதாரம்பம், வேதாத்யயனம் 14. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.
Working...
X