Announcement

Collapse
No announcement yet.

Article 370

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Article 370

    370ஆவது பிரிவு என்றால் என்ன?அது கூறுவது ஏன்ன?
    Posted on June 3, 2014 by vidhai2virutcham

    370 வது பிரிவு என்றால்…?
    இன்று இந்திய அளவில் காஷ்மீரின் 370 வது சிறப்பு பிரிவுபற்றி நாடு தழுவிய

    அளவில் வாத, பிரதிவாதங்கள் நடக்கி ன்றன.
    ஆனால் அதை கேட்கும் நமக்கு அந்த 370 வது பிரிவு என்றால் என்ன?அது

    கூறுவது ஏன்ன?அதனால் காஷ்மீருக்கு
    என்ன சிறப்பு கொடுக்கப்படுகிறது?
    அந்த 370 வது பிரிவு கொடுக்கப்பட என்ன காரணம்?
    என்று பல கேள்விகள் எழுகின்ற ன.

    ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல்

    சாசனத்தின் பிரிவு 370 பற்றி ஒரு விவாதம் நடத்த வே ண்டுமென்று தேர்தல்

    பிரச்சார த்தின் போதே திரு. நரேந்திர மோடி கூறி னார். இப்பொழுது அவர்

    பிரதமர் ஆனது ம் அவரது அலுவலக இணையமைச்சர் ஒருவர் அந்த

    விஷயத்தை கிளப்பியுள் ளார்.

    தடுமாறிய மன்னர்

    ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந்த பூமியை இந்தியா, பாகி ஸ்தான்

    என்று இரு நாடுகளாகப் பிரித்துத் தந்துவிட்டு வெளியே றியபோது, இங்கிருந்த

    நூற்றுக் கணக்கான சமஸ்தானங்கள் ஏ தேனும் ஒரு நாட்டோடு இணை ந்தன.

    ஜம்மு – காஷ்மீரில் வி னோதமான நிலைஏற்பட்டது. அ ங்கே குடிமக்களில்

    பெரும்பான்மையோர் முஸ்லிம்களாக இரு க்க, மகாராஜாவானவர் இந்துவாக

    இருக்க, முடிவெடுக்கமுடி யா மல் தடுமாறிக் கொண்டிருந் தது.
    1947 அக்டோபர் 26 அன்று இந்தி யாவின் கவர்னர் ஜெனரல் மவு ண்ட்

    பேட்டனுக்கு ஜம்மு – காஷ் மீரின் மகா ராஜா ஹரிசிங் எழு திய கடிதத்தில்

    இப்படிக் குறிப்பி ட்டார்; “எந்த நாட்டோடு இணை வது அல்லது தனித்து

    நிற்பது இரு நாடுகளுக்கும் மற்றும் என து அரசிற்கும் நல்லதில்லையா என்று

    முடிவு செய்ய எனக்குக் கால அவகாசம் தேவைப்படுகி றது.
    ” இத்தகைய மனோநிலையில் இருந்த அந்த மகாராஜா பாகிஸ் தானை அணுகி

    அதனுடன் “தற்போதைய நிலையைத் தொடரும் ஒப்பந்தம்” ஒன்றை

    உருவாக்கி யிருந்தார்.
    ஒருபுறம் இப்படியொரு ஒப்பந்த த்தை ஏற்றுக் கொண்டிருந்த பா கிஸ்தான் அரசு

    மறுபுறம் ஜம்மு – காஷ்மீரைத் தன்னோடு கட்டா யப் படுத்தி இணைக்க

    மறைமுக வேலைகளில் இறங்கியது. ஹரி சிங் தனது கடிதத்தில் தொடர் ந்து

    கூறியது போல “நவீன ஆயுதங் களைத் தாங்கிய பழங்குடி மக்களின் பெரும்

    ஊடுருவல்” பாகிஸ் தானிலிருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் இந்திய

    ராணு வத்தின் உதவியை நாடினார் ஹரிசிங்.
    அந்த உதவியை அந்த சமஸ்தானத்தி ற்கு இந்திய அரசு வழங்க வேண்டுமெ

    ன்றால் அது இந்தியாவோடு இணைய ஒப்புக் கொண்டிருக்க வேண்டுமென்ப து

    எளிய யதார்த்தம்.

    இதைப் புரிந்து கொண்டிருந்த ஹரிசிங் இந்தக் கடிதத்தோடு அப்ப டியொரு

    “இணைப்புப் பத்திரத்தை”யும் கை யெழுத்திட்டு அனுப்பி யிருந்தார்.
    இந்த ஏற்பாட்டிற்கு ஜம்மு – காஷ்மீர் மக்க ளின் ஆதரவும் உண்டு

    எனக்காட்டும் வகை யி ல் அவர்களது த லைவராகிய ஷேக் அப்துல்லாவைக்

    கொண்டு ஓர் இடைக் கால அரசை ஏற்படுத்த திட்ட மிட்டிருப்பதையும் தனது

    கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
    இணைப்புப் பத்திரம்
    ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஆங்கிலேயே சாம்ராஜியத்திற்குள் தனி

    சமஸ்தானமாக இருந்தவர்கள். இந்துக்களை ஆகப் பெரும்பான் மையாகக்

    கொண்ட இந்தியா வோடு இணைவது எனும்போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள்

    நெஞ்சில் எங்கே தாங்கள் இனி இரண்டாந்தரக் குடிமக்களாக

    நடத்தப்படுவோமோ எனும் சந் தேகம் எழுந்திருந்தால் ஆச்சரி யப்பட

    ஏதுமில்லை.
    இந்தியாவிலிருந்த இந்துத்து வா வாதிகளின் பேச்சுக்களும், செயல்களும்

    அப்படித்தான் இரு ந்தன. பிரிவினையை ஒட்டி நட ந்த கொடூரமான மதக்

    கலவரங்கள் அப்போது இன்னும் ரத்தச் சாட்சியாய் இருந்தன.
    எனவே, அந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் “இணைப்புப் பத்திரத்தில்”

    ஒரு முக்கியமான சரத்து இருந்தது.
    அது: “இங்குள்ள அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள விஷயங்கள் தொ

    டர்பாக இந்த அரசுக்கு இந்திய சட்ட மன்றம் சட்டம் செய் யலாம் என்பதை

    நான் ஏற்கிறேன்”. இது மகாராஜா ஹரிசிங்கின் ஒப்புதல். அங்குள்ள

    அட்டவணையில் நான்கு விஷயங்க ள் குறிப் பிடப்பட்டன.
    அவை:
    1. பாதுகாப்பு,
    2. வெளிவிவகாரம்,
    3. தகவல்தொடர்பு,
    4. துணை விஷயங்கள்”.
    இதன் அர்த்தம் இந்த நான்கு விஷயங்கள் தவிர இதரவை பற்றி ஜம்மு –

    காஷ்மீர் அரசுதான் சட்டம் இயற்ற*லாம் என்பதாகும். இப்ப டிப்பட்ட விரிந்த

    மாநில சுயாட்சியை நிபந்தனையாகக் கொண்டு தான் இந்தியாவோடு இணைய

    ஒப்புக் கொண் டார் ஹரிசிங்.
    இத்தகைய “இணைப்புப் பத்திரத்தை” மறுநாள் ஏற்றுக் கொண்டு தான்,

    அன்றே காஷ்மீ ருக்குத் தனது படை களை அனுப்பியது இந் திய அரசு.

    தலைநகரம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரு ம்பகுதி காப்பற்றப்பட் டது.
    இதிலிருந்த இந்தச் சர த்தைக் கணக்கில் கொ ண்டுதான் இந்திய அர சியல்

    சாசனத்தில் பிரிவு 370 உருவாக்கப் பட்டது. அதில் “இணைப்புப் பத்திரத்தில்

    குறிப்பிடப்பட்டுள்ள விஷ யங்கள் மற்றும் அந்த மாநில அரசின் ஒப்புதலோடான

    விஷயங் கள்” பற்றி இந்திய அரசு சட்டங்கள் இயற்றும் என்று குறிப்பாகச்

    சுட்டிக்காட்ட* ப்பட்டது.
    இந்திய அரசியல் நிர்ணய சபை 1949 அக் டோபரில் இதை ஏற்றது என்பது

    சுதந்திர இந் தியாவின் அரசியல் நேர்மையை, கொடுத்த வாக்குறுதியைக்

    காப்பாற்றும் தன்மையை எடுத்துக்காட்டியது.
    இணைப்பை பலப்படுத்தியது
    உண்மை, பிரிவு 370 பற்றி காங் கிரசின் உயர் மட்டக்குழு வில் கருத்து

    வேறுபாடுகள் எழுந்தன என்பது. ஒரு மாநிலத் திற்கு இத் தகைய தனி

    அந்தஸ்து தருவது எனும் போது அப்படி எழுவது இயல்புதானே. ஆனால்,

    அதன் தேவைஒரு மாதிரியாகப் பலரா லும் உணரப்பட்டது, ஏற்கப்பட் டது.

    நேருவைத் தாழ்த்தியும், படேலைத் தூக்கியும் பேசி வருகி றார் கள் பாஜக

    தலைவர்கள்.
    ஆனால் பிரிவு370-ஐ பொறுத்தவரை நேரு மட்டுமல் லாது படே லும்

    ஆதரித்தார் என்ப தே சரித்திரம்.
    இது பற்றிய விபரங்க ளை திரு. ஏ.ஜி. நூரனி “பிரிவு 370 : ஜம்மு – கா

    ஷ்மீரின் அரசியல் சாசன வரலாறு” எனும் நூலில் தந்துள் ளார்.ஜம்மு –

    காஷ்மீரில் 1951ல் நடந்த தேர்தலில் ஷேக் அப்துல் லாவின் “தேசிய மாநாடு”

    கட்சி பெருவெற்றி பெற்றது.
    1952 ஜூலையில் மத்திய அரசோடு ஷேக் ஒப்பந்தத் திற்கு வந்தார், அதன்

    மூல ம் பிரிவு 370 இரு தரப்பா லும் உறுதிசெய்யப்பட்டது. இப்படியாக நமது

    அரசிய ல் சாசனத்தில் இடம் பெற் றது சரித்திரப் புகழ் பூத்த இந்தப் பிரிவு.

    இதன் மூலம் அந்த மாநில மக்களுக்குத் தரப்பட்ட விரிவான சுயாட்சிதான்

    இந்தியாவுடனான அதன் இ ணைப்பை பலப்படுத்தியது, பிரிவினைவாதிகளின்

    கரங்களைக் க ட்டுப்படுத்தியது.
    பாகிஸ்தான் ஏற்கவில்லை.
    மகாராஜா ஹரிசிங் தயாரித்த “இணைப்புப் பத்திரத்தை” அந் தக்

    காலத்திலேயே பாகிஸ்தா ன் ஏற்கவில்லை.
    இந்தியாவுடனான இணைப் பையே அவர்கள் ஏற்கவில்லை.
    - அருணன்,
    ஆதாரங்கள்
    1. Article 370 of the Constitution of India
    2. Article 370: A Constitutional History of Jammu and

    Kashmir – A.G. Noorani
    3. Instrument of Accession
    4. Maharaja Hari Singh’s letter to Lord Mountbatten –

    Dated 26-10-1947
Working...
X