Announcement

Collapse
No announcement yet.

வீடு வரை உறவு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வீடு வரை உறவு

    ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
    தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
    கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
    ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
    கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    கடைசி வரை யாரோ?
    உ..உ ஆயி ஆரிரோ உ..உ ஆயி ஆரிரோ
    ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
    ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
    தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
    தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
    பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    கடைசி வரை யாரோ?
    சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
    வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
    சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
    வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
    சென்று விடு என்பான்
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    கடைசி வரை யாரோ?
    விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
    சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
    சூனியத்தில் நிலைப்பு
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
    கடைசி வரை யாரோ?

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

  • #2
    Re: வீடு வரை உறவு

    Sir,
    What meaningful songs were written in those days by Sri.Kannadasan!!
    Even after more than 5 decades we remember each line.Present day songs are just a jumble of noises and not thought provoking like those of old days.
    Thanks for taking us back with a song full of facts.
    varadarajan

    Comment

    Working...
    X