Announcement

Collapse
No announcement yet.

Baghavath Geetha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Baghavath Geetha

    கீதை – முதல் அத்தியாயம்

    அர்ஜுன விஷாத யோகம்

    குருக்ஷேத்திரப் போர் நடக்கையிலே, கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன், தான் அங்கு செல்லக் கூடாமையால் அஸ்தினாபுரத்தில் தனதரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான்.

    வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் போர்த் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பாஷணையை சஞ்ஜயன் கூறுவதாகச் சமைக்கப்பட்ட பகவத்கீதைக்கு இந்த முதலத்தியாயம் பாயிரமாகக் கருதத்தகும்.
    ________________________________________
    धृतराष्ट्र उवाच
    धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
    मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥
    த்⁴ருதராஷ்ட்ர உவாச
    த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:|
    மாமகா: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||
    த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
    த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = அற நிலமாகிய குரு நிலத்தில்,
    ஸமவேதா: = ஒன்று கூடி;
    யுயுத்ஸவ: = போர்செய்ய விரும்பித் திரண்ட;
    மாமகா: = நம்மவர்களும்;
    பாண்ட³வா: = பாண்டவரும்;
    கிம் அகுர்வத = என்ன செய்தனர்?
    திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?
    ________________________________________
    सञ्जय उवाच
    दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
    आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥२॥
    ஸஞ்ஜய உவாச
    த்³ருஷ்ட்வா து பாண்ட³வாநீகம் வ்யூட⁴ம் து³ர்யோத⁴நஸ்ததா³|
    ஆசார்யமுபஸங்க³ம்ய ராஜா வசநமப்³ரவீத் ||1-2||
    ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான்;
    ததா³ து³ர்யோத⁴ந = அப்போது துர்யோதனன்;
    வ்யூட⁴ம் பாண்ட³வாநீகம் = அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை;
    த்³ருஷ்ட்வா = பார்த்துவிட்டு;
    ஆசார்யம் உபஸங்க³ம்ய = துரோணனிடம் போய்;
    வசனம் அப்³ரவீத் = வார்த்தைகளை சொல்லலாயினன்;
    சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:
    ________________________________________
    पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
    व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता॥३॥
    பஸ்²யைதாம் பாண்டு³புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
    வ்யூடா⁴ம் த்³ருபத³புத்ரேண தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா ||1-3||
    ஆசார்ய தவ ஸி²ஷ்யேண = ஆசார்யரே! உன்னுடைய சீடனான;
    தீ⁴மதா= நிபுணனான;
    த்³ருபத³ புத்ரேண = துருபதன் மகனால்;
    வ்யூடா⁴ம் பாண்டு³புத்ராணாம் = வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்;
    ஏதாம் மஹதீம் சமூம் = இந்த பெரிய படையை;
    பஸ்²ய = பார்!
    குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்!
    ________________________________________
    अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
    युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः॥४॥
    அத்ர ஸூ²ரா மஹேஷ்வாஸா பீ⁴மார்ஜுநஸமா யுதி⁴|
    யுயுதா⁴நோ விராடஸ்²ச த்³ருபத³ஸ்²ச மஹாரத²: ||1-4||
    அத்ர = இங்கு;
    மஹேஷ்வாஸா: = பெரிய வில்லாளிகளும்;
    யுதி⁴ = போரில்;
    பீ⁴மார்ஜுநஸமா: = வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய;
    ஸூ²ரா: = சூரர்;
    யுயுதா⁴ந: = யுயுதானன்;
    த்³ருபத³: = மகாரதனாகிய துருபதன்;
    இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;
    ________________________________________
    धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।
    पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः॥५॥
    த்⁴ருஷ்டகேதுஸ்²சேகிதாந: காஸி²ராஜஸ்²ச வீர்யவாந்|
    புருஜித்குந்திபோ⁴ஜஸ்²ச ஸை²ப்³யஸ்²ச நரபுங்க³வ: ||1-5||
    த்⁴ருஷ்டகேது: = திருஷ்ட கேது;
    சேகிதாந: = சேகிதானன்;
    வீர்யவாந் காஸி²ராஜ: = வீரியமுடைய காசி ராஜன்;
    புரூஜித் =புரூஜித்;
    குந்திபோ⁴ஜ: = குந்தி போஜன்;
    நரபுங்க³வ ஸை²ப்³ய: = மனிதரேறாகிய சைவியன்;
    திருஷ்ட கேது; சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;
    ________________________________________
    युधामन्युश्च विक्रान्त: उत्तमौजाश्च वीर्यवान्।
    सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः॥६॥
    யுதா⁴மந்யுஸ்²ச விக்ராந்த: உத்தமௌஜாஸ்²ச வீர்யவாந்|
    ஸௌப⁴த்³ரோ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வ ஏவ மஹாரதா²: ||1-6||
    விக்ராந்த: = வலிமை மிக்க;
    யுதா⁴மந்யு: = யுதாமந்யு;
    வீர்யவாந் உத்தமௌஜா: = வீரன் உத்தமௌஜா;
    ஸௌப⁴த்³ர: = சுபத்திரை மகன்;
    த்³ரௌபதே³யா: = திரௌபதி மக்கள்;
    ஸர்வ ஏவ மஹாரதா²: = எல்லோருமே மகாரதர்;(6)
    வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.
    ________________________________________
    अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
    नायका मम सैन्यस्य सञ्ज्ञार्थं तान्ब्रवीमि ते॥७॥
    அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே தாந்நிபோ³த⁴ த்³விஜோத்தம|
    நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம் தாந்ப்³ரவீமி தே ||1-7||
    த்³விஜோத்தம் = இருபிறப்பாளரில் மேம்பட்டவனே;
    அஸ்மாகம் = நம்முள்ளே;
    யே விஸி²ஷ்டா: = எவர் விசேஷமாக இருக்கின்றனரோ;
    தாந் = அவர்களை;
    நிபோ³த⁴ = தெரிந்து கொள்;
    மம ஸைந்யஸ்ய = எனது படையின்;
    யே நாயகா: = எவர் நாயகர்களோ;
    தாந் = அவர்களை;
    ஸம்ஜ்ஞார்த²ம் = கவனத்திற்காக;
    ப்³ரவீமி = சொல்லுகிறேன்;
    இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.
    ________________________________________
    भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
    अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥८॥
    ப⁴வாந்பீ⁴ஷ்மஸ்²ச கர்ணஸ்²ச க்ருபஸ்²ச ஸமிதிஞ்ஜய:|
    அஸ்²வத்தா²மா விகர்ணஸ்²ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ||1-8||
    ப⁴வாந் = நீ;
    பீ⁴ஷ்ம: கர்ண: க்ருப: = பீஷ்மன், கர்ணன், கிருபன்;
    ஸமிதிஞ்ஜய: = பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய;
    ததா² ஏவ = அதே போல;
    அஸ்²வத்தா²மா விகர்ண: ஸௌமத³த்தி: = அசுவத்தாமன், விகர்ணன், சோமதத்தன் மகன்;
    நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;
    ________________________________________
    अन्ये च बहवः शूरा: मदर्थे त्यक्तजीविताः।
    नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥९॥
    அந்யே ச ப³ஹவ: ஸூ²ரா: மத³ர்தே² த்யக்தஜீவிதா:|
    நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்³த⁴விஸா²ரதா³: ||1-9||
    அந்யே ச = இன்னும் வேறு;
    ப³ஹவ: ஸூ²ரா: = பல சூரர்;
    மத³ர்தே² = என் பொருட்டு;
    த்யக்தஜீவிதா: = வாழ்க்கையைத் துறந்தோர்;
    ஸர்வே = எல்லோருமே;
    நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: = பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்;
    யுத்³வவிஸா²ரதா³: = போரில் நிபுணர்;
    இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.
    ________________________________________
    अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
    पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्॥१०॥
    அபர்யாப்தம் தத³ஸ்மாகம் ப³லம் பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம்|
    பர்யாப்தம் த்வித³மேதேஷாம் ப³லம் பீ⁴மாபி⁴ரக்ஷிதம்||10||
    பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மனால் காக்கப்படும்;
    அஸ்மாகம் ப³லம் = நமது படை;
    அபார்யாப்தம் = (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை;
    பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = வீமனால் காக்கப்படும்;
    ஏதேஷாம் ப³லம் = இவர்களுடையை படையோ;
    பர்யாப்தம் = நிறைந்திருக்கிறது
    (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.
    ________________________________________
    अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
    भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि॥११॥
    அயநேஷு ச ஸர்வேஷு யதா²பா⁴க³மவஸ்தி²தா:|
    பீ⁴ஷ்மமேவாபி⁴ரக்ஷந்து ப⁴வந்த: ஸர்வ ஏவ ஹி ||1-11||
    ஸர்வேஷு அயநேஷு = எல்லா இடங்களிலும்;
    யதா²பா⁴க³ம் அவிஸ்த²தா: = வகுப்புகளின்படி நின்றுகொண்டு;
    ப⁴வந்த: ஸர்வ = நீங்களனைவரும்;
    பீ⁴ஷ்மம் ஏவ = பீஷ்மனையே;
    அபி⁴ரக்ஷந்து = காக்கக் கடவீர்
    நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.
    ________________________________________
    तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
    सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्॥१२॥
    தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்³த⁴: பிதாமஹ:|
    ஸிம்ஹநாத³ம் விநத்³யோச்சை: ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதாபவாந் ||1-12||
    குருவ்ருத்³த⁴: = கௌரவரில் மூத்தவராகிய;
    ப்ரதாபவாந் பிதாமஹ: = கீர்த்திமிக்க பாட்டன்;
    தஸ்ய = அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்);
    ஹர்ஷம் ஸஞ்ஜநயந் = மகிழ்ச்சி விளைவிக்குமாறு;
    உச்சை: ஸிம்ஹநாத³ம் = உயர்ந்த குரலில் சிங்கநாதம்;
    விநத்³ய = புரிந்து;
    ஸ²ங்க²ம் த³த்⁴மௌ = சங்கை யூதினான்;
    (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை யூதினான்.
    ________________________________________
    ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
    सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्॥१३॥
    தத: ஸ²ங்கா²ஸ்²ச பே⁴ர்யஸ்²ச பணவாநககோ³முகா²:|
    ஸஹஸைவாப்⁴யஹந்யந்த ஸ ஸ²ப்³த³ஸ்துமுலோऽப⁴வத் ||1-13||
    தத: = அப்பால்;
    ஸ²ங்கா² ச பே⁴ர்ய: ச = சங்குகளும், பேரிகைகளும்;
    பணவ ஆநக கோ³முகா²: = தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்;
    ஸஹஸா = திடீரென;
    அப்⁴யஹந்யந்த = ஒலித்தன;
    ஸ: ஸ²ப்³த³ = அந்த ஓசை;
    துமுல: = பயங்கரமாக;
    அப⁴வத் = இருந்தது;
    அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.
    ________________________________________
    ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
    माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः॥१४॥
    தத: ஸ்²வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
    மாத⁴வ: பாண்ட³வஸ்²சைவ தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴மது: ||1-14||
    தத: = பின்பு;
    ஸ்²வேதை: ஹயை: யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய;
    மஹதி ஸ்யந்த³நே = பெருந் தேரில்;
    ஸ்தி²தௌ மாத⁴வ: பாண்ட³வ: = நின்ற மாதவனும் பார்த்தனும்;
    தி³வ்யௌ ஸ²ங்கௌ² = தெய்வீகமான சங்குகளை;
    ப்ரத³த்⁴மது: = ஊதினர்
    பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை யூதினர்.
    ________________________________________
    पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः।
    पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः॥१५॥
    பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ² தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:|
    பௌண்ட்³ரம் த³த்⁴மௌ மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர: ||1-15||
    ஹ்ருஷீகேஸ²: பாஜ்ஜந்யம் = கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை;
    த⁴நஞ்ஜய: தே³வத³த்தம் = அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை;
    பௌணட்³ரம் மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர: = பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்;
    த³த்⁴மௌ = ஊதினான்;
    கண்ணன் பாஞ்சஜன்யத்தை யூதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.
    ________________________________________
    अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
    नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१६॥
    அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
    நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||
    அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர: = அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்;
    நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்
    குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

    to be continued

    Source: Sangatham.com
    Last edited by soundararajan50; 13-07-14, 07:04. Reason: source information
Working...
X