Announcement

Collapse
No announcement yet.

Baghavath Geetha 1st part continued

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Baghavath Geetha 1st part continued

    கீதை - முதல் அத்யாயம்- தொடர்ச்சி

    काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
    धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः॥१७॥
    காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
    த்⁴ருஷ்டத்³யும்நோ விராடஸ்²ச ஸாத்யகிஸ்²சாபராஜித: ||1-17||
    பரமேஷ்வாஸ: காஸ்²ய: ச = வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்;
    மஹாரத²: ஸி²க²ண்டீ³ ச = மகாரதனாகிய சிகண்டியும்;
    த்⁴ருஷ்டத்³யும்ந விராட: ச = திருஷ்டத்யும்னனும் விராடனும்;
    அபராஜித: ஸாத்யகிஸ்²ச = வெல்லப்படாத ஸாத்தியகியும்;
    வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,
    ________________________________________
    द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
    सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्॥१८॥
    த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வஸ²: ப்ருதி²வீபதே|
    ஸௌப⁴த்³ரஸ்²ச மஹாபா³ஹு: ஸ²ங்கா²ந்த³த்⁴மு: ப்ருத²க்ப்ருத²க் ||1-18||
    த்³ருபதோ³ த்³ரௌபதே³யா: ச = துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்;
    மஹாபா³ஹு: ஸௌப⁴த்³ர: = பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்;
    ஸர்வஸ²: = எல்லோரும்;
    ப்ருதி²வீபதே = பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்);
    ப்ருத²க் ப்ருத²க் = தனித்தனியாக;
    ஸ²ங்கா²ந் த³த்⁴மு: = சங்குகளை ஒலித்தனர்;
    துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். ‘பூமிக்குத் தலைவனே!’
    ________________________________________
    स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।
    नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्॥१९॥
    ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்|
    நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ துமுலோ வ்யநுநாத³யந் ||1-19||
    ஸ: துமுல: கோ⁴ஷ: = அந்த பயங்கர ஓசை;
    நப⁴: ப்ருதி²வீம் ச = ஆகாயத்தையும் பூமியையும்;
    வ்யநுநாத³யந் = ஒலிக்கச் செய்து;
    தா⁴ர்தராஷ்ட்ரணாம் = திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்;
    ஹ்ருத³யாநி = நெஞ்சுகளை;
    வ்யதா³ரயத் = பிளந்தது;
    அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.
    ________________________________________

    ________________________________________
    अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
    प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः॥२०॥
    அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ:|
    ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ: ||1-20||
    அத² = அப்பால்;
    கபித்⁴வஜ: பாண்ட³வ: = குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன்;
    வ்யவஸ்தி²தாந் தா⁴ர்தராஷ்ட்ராந் = எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை;
    த்³ருஷ்ட்வா = நோக்கி;
    ததா³ ஸ²ஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே = அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது;
    த⁴நு: உத்³யம்ய = வில்லையேந்திக் கொண்டு;
    அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.
    ________________________________________
    हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
    अर्जुन उवाच
    सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥२१॥
    ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|
    அர்ஜுன உவாச
    ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||
    ஹ்ருஷீகேஸ²ம் இத³ம் வாக்யம் = கண்ணனிடம் இந்த வார்த்தைகளை;
    ஆஹ = சொல்கிறான்;
    மஹீபதே = ராஜனே!;
    அர்ஜுன உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்.
    அச்யுத = ஹே அச்சுதா;
    மே ரத²ம் = என்னுடைய ரதத்தை;
    உப⁴யௌ: ஸேநயோ: = இரண்டு படைகளின்;
    மத்⁴யே = நடுவே;
    ஸ்தா²பய = நிறுத்துக
    அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)
    ________________________________________
    यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
    कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे॥२२॥
    யாவதே³தாந்நிரீக்ஷேऽஹம் யோத்³து⁴காமாநவஸ்தி²தாந்|
    கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யமஸ்மிந்ரணஸமுத்³யமே ||1-22||
    அஸ்மிந் ரணஸமுத்³யமே = இந்தப் போர்த் தொடக்கத்தில்;
    மயா கை: ஸஹ யோத்³வவ்யம் = என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
    யோத்³து⁴காமாந் அவஸ்தி²தாந் ஏதாந் = சமரை விரும்பி நிற்கும் இவர்களை;
    யாவத் = எவ்வளவு நேரம் ;
    அஹம் நிரீக்ஷே = நான் பார்க்கிறேன்
    “சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”
    ________________________________________
    योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
    धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः॥२३॥
    யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதே’த்ர ஸமாக³தா:|
    தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ: ||1-23||
    து³ர்பு³த்³தே⁴: தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய = கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு;
    யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ: = போரில் நன்மை செய்யும் வண்ணம்;
    யே = எவர்;
    ஏதே = இந்த அரசர்கள்;
    அத்ர ஸமாக³தா: =இங்கே வந்துள்ளனர்;
    யோத்ஸ்யமாநாந் = போர் செய்ய திரண்டு நிற்பவர்களை;
    அஹம் அவேக்ஷே = நான் காண வேண்டும்
    “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.
    ________________________________________
    सञ्जय उवाच
    एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
    सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥२४॥
    ஸஞ்ஜய உவாச
    ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ² கு³டா³கேஸே²ந பா⁴ரத|
    ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||
    ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
    பா⁴ரத = (கேளாய்) பரத நாட்டரசே;
    கு³டா³கேஸே²ந = அர்ஜுனனால்;
    ஏவம் உக்த: = இவ்வாறு சொன்னவற்றை கேட்டு;
    ஹ்ருஷீகேஸ²: = கண்ணன்;
    உப⁴யோ: ஸேநயோ: = இரண்டு படைகளுக்கும்;
    மத்⁴யே = நடுவில்;
    ரதோ²த்தமம் = மேன்மை கொண்ட அத்தேரை;
    ஸ்தா²பயித்வா = நிறுத்தி;
    சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.
    ________________________________________
    भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
    उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥२५॥
    பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்|
    உவாச பார்த² பஸ்²யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||
    பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த: = பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக;
    ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் = எல்லா அரசர்களுக்கு முன்;
    இதி உவாச = இவ்வாறு சொன்னான்;
    ஸமவேதாந் = கூடி இருக்கும்;
    ஏதாந் குருந் = கௌரவரை;
    பஸ்²ய = பார்
    பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.
    ________________________________________
    तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्।
    आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा॥२६॥
    தத்ராபஸ்²யத்ஸ்தி²தாந்பார்த²: பித்ரூநத² பிதாமஹாந்|
    ஆசார்யாந்மாதுலாந்ப்⁴ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ²ம்ஸ்ததா² ||1-26||
    அத² பார்த² = இதற்கு பின் அர்ஜுனன்;
    தத்ர ஸ்தி²தாந் = அங்கே நிற்கும்;
    பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந் = தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்;
    ப்⁴ராத்ருந் புத்ராந் பௌத்ராந் = சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்;
    ததா² = அதே போல;
    ஸகீ²ந் = நண்பர்களும்;
    அபஸ்²யத் = பார்த்தான்
    அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.
    ________________________________________
    श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
    तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्॥२७॥
    ஸ்²வஸு²ராந்ஸுஹ்ருத³ஸ்²சைவ ஸேநயோருப⁴யோரபி|
    தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்ப³ந்தூ⁴நவஸ்தி²தாந் ||1-27||
    ஸேநயோ: உப⁴யோ: அபி = இரண்டு படைகளிலும்;
    ஸ்²வஸு²ராந் = மாமன்மாரும்;
    ஸுஹ்ருத³ ச = நண்பர்களும்;
    ஸர்வாந் ப³ந்தூ⁴ந் = உறவினரெல்லாரும்;
    அவஸ்தி²தாந் = நிற்பவர்களை;
    ஸமீக்ஷ்ய = நன்றாக பார்த்து;
    கௌந்தேய: = அர்ஜுனன்
    அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:
    ________________________________________
    कृपया परयाऽविष्टो विषीदन्निदमब्रवीत्।
    अर्जुन उवाच
    दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्॥२८॥
    க்ருபயா பரயாऽவிஷ்டோ விஷீத³ந்நித³மப்³ரவீத்|
    அர்ஜுன உவாச
    த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ||1-28||
    ஸ: கௌந்தேய: = அந்த அர்ஜுனன்;
    பரயா க்ருபயா அவிஷ்ட: = மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக;
    விஷீத³ந் = துயரடைந்து;
    இத³ம் அப்³ரவீத் = இவ்வாறு சொல்லுகிறான்
    க்ருஷ்ண = ஹே கிருஷ்ணா;
    யுயுத்ஸும் = போர் செய்ய விருப்பத்துடன்;
    ஸமுபஸ்தி²தம் = நிற்கிற;
    இமம் ஸ்வஜநம் த்³ருஷ்ட்வா =இந்த சுற்றத்தார்களை கண்டு;
    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,
    ________________________________________
    सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
    वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥
    ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
    வேபது²ஸ்²ச ஸ²ரீரே மே ரோமஹர்ஷஸ்²ச ஜாயதே ||1-29||
    மம கா³த்ராணி ஸீத³ந்தி = என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன;
    முக²ம் பரிஸு²ஷ்யதி = வாய் உலர்கிறது;
    மே ஸ²ரீரே வேபது²: = என்னுடைய உடலில் நடுக்கம்
    ரோமஹர்ஷ: ஜாயதே = மயிர் சிலிர்ப்பு அடைகிறது
    என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
    ________________________________________
    गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
    न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥
    கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே|
    ந ச ஸ²க்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந: ||1-30||
    ஹஸ்தாத் கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே = கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது;
    த்வக் ச ஏவ பரித³ஹ்தே = உடலிலும் எரிச்சல் உண்டாகிறது;
    மந: ப்⁴ரமதி இவ = மனம் குழம்புவது போல;
    அவஸ்தா²தும் ந ஸ²க்நோமி = நிற்கவும் முடியவில்லை
    காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
    ________________________________________
    निमित्तानि च पश्यामि विपरीतानि केशव।
    न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे॥३१॥
    நிமித்தாநி ச பஸ்²யாமி விபரீதாநி கேஸ²வ|
    ந ச ஸ்²ரேயோऽநுபஸ்²யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||1-31||
    விபரீதாநி நிமித்தாநி ச பஸ்²யாமி = விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்;
    ஆஹவே = போரிலே;
    ஸ்வஜநம் ஹத்வா = சுற்றத்தார்களை கொன்று;
    ஸ்²ரேய: ச = நன்மையும்;
    ந அநுபஸ்²யாமி = தோன்றவில்லை;
    கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.
    ________________________________________
    न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च।
    किं नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा॥३२॥
    ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா²நி ச|
    கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ கிம் போ⁴கை³ர்ஜீவிதேந வா ||1-32||
    விஜயம் ராஜ்யம் ச ஸுகா²நி = வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்;
    கோ³விந்த³ =ஹே கோ³விந்தா;
    ந காங்க்ஷே = விரும்புகிலேன்;
    ஜீவிதேந ராஜ்யேந: போ⁴கை³ வா = உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
    கிம் = என்ன
    கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?
    ________________________________________
    येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।
    त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च॥३३॥
    யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி ச|
    த இமேऽவஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த⁴நாநி ச ||1-33||
    யேஷாம் அர்தே² = எவருக்காக;
    ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி த⁴நாநி = அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்;
    ந: காங்க்ஷிதம் = நமக்கு விருப்பமோ;
    தே இமே = அந்த இவர்களே;
    யுத்³வே = யுத்தத்தில்;
    ப்ராணாந் = உயிர்களை;
    த்யக்த்வா = இழந்தவராய்;
    இமே’ அவஸ்தி²தா = நிற்கிறார்கள்
    யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.
    ________________________________________
    आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।
    मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा॥३४॥
    ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததை²வ ச பிதாமஹா:|
    மாதுலா: ஸ்²வஸு²ரா: பௌத்ரா: ஸ்²யாலா: ஸம்ப³ந்தி⁴நஸ்ததா² ||1-34||
    ஆசார்யா: பிதர: புத்ரா: = குருமார்கள், தந்தையர், மக்கள்;
    ததா² பிதாமஹா: மாதுலா: ஸ்²வஸு²ரா: = அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்;
    பௌத்ரா: ஸ்²யாலா: ஸம்ப³ந்தி⁴ந: = பேரரும், மைத்துனரும், உறவினர்களும்
    குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் (இங்குளர்). 34
    ________________________________________
    தொடரும்

    Source:Sangatham.com
Working...
X