Announcement

Collapse
No announcement yet.

Baghavath Geetha 1st part continued

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Baghavath Geetha 1st part continued

    கீதை - முதல் அத்யாயம் - தொடர்ச்சி

    एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।
    अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते॥३५॥
    ஏதாந்ந ஹந்துமிச்சா²மி க்⁴நதோऽபி மது⁴ஸூத³ந|
    அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ||1-35||
    மது⁴ஸூத³ந = மதுசூதனா!
    க்⁴நத: அபி = நான் கொல்லப் பட்டாலும்
    த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: = மூவுலகின் ஆட்சிக்காகவும்;
    ஏதாந் ஹந்தும் ந இச்சா²மி = இவர்களை கொல்ல விரும்பவில்லை;
    மஹீக்ருதே கிம் நு = பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா);
    மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
    ________________________________________
    निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
    पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः॥३६॥
    நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்த³ந|
    பாபமேவாஸ்²ரயேத³ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந: ||1-36||
    ஜநார்த³ந = ஜனார்தனா!
    தார்தராஷ்ட்ராந் நிஹத்ய = திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று;
    ந: கா ப்ரீதி: ஸ்யாத் = நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது;
    ஏதாந் ஆததாயிந: ஹத்வா = இந்த பாவிகளை கொல்வதால்;
    அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்²ரயேத் = நம்மை பாவமே சாரும்
    ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.
    ________________________________________
    तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।
    स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥३७॥
    தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா⁴ர்தராஷ்ட்ராந்ஸ்வபா³ந்த⁴வாந்|
    ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா ஸுகி²ந: ஸ்யாம மாத⁴வ ||1-37||
    மாத⁴வ = ஹே மாதவா;
    தஸ்மாத் = இதிலிருந்து;
    ஸ்வபா³ந்த⁴வாந் தா⁴ர்தராஷ்ட்ராந் = சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை;
    ஹந்தும் வயம் ந அர்ஹா: = கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்;
    ஹி = ஏனெனில்;
    ஸ்வஜநம் ஹத்வா = பந்துக்களை கொன்றபின்;
    கத²ம் ஸுகி²ந: ஸ்யாம = எப்படி இன்புற்று இருப்போம்?
    ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?
    ________________________________________
    यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।
    कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्॥३८॥
    யத்³யப்யேதே ந பஸ்²யந்தி லோபோ⁴பஹதசேதஸ:|
    குலக்ஷயக்ருதம் தோ³ஷம் மித்ரத்³ரோஹே ச பாதகம் ||1-38||
    லோப⁴ உபஹதசேதஸ: = அவாவின் மிகுதியால் அறிவிழந்து;
    ஏதே = இவர்கள்
    குலக்ஷயக்ருதம் தோ³ஷம் = குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்;
    மித்ரத்³ரோஹே பாதகம் = நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்;
    ந பஸ்²யந்தி = காண்கிலர் ;
    யத்³யபி = இருந்தும்;
    அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,
    ________________________________________
    कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।
    कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन॥३९॥
    கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴: பாபாத³ஸ்மாந்நிவர்திதும்|
    குலக்ஷயக்ருதம் தோ³ஷம் ப்ரபஸ்²யத்³பி⁴ர்ஜநார்த³ந ||1-39||
    ஜநார்த³ந = ஜனார்தனா!
    குலக்ஷயக்ருதம் தோ³ஷம் = குல நாசத்தினால் வரும் குற்றம்
    ப்ரபஸ்²யத்³பி⁴ = நன்கு அறிந்த
    அஸ்மாபி⁴: = நம்மால்
    பாபாத் நிவர்திதும் = பாவத்தில் இருந்து விலக;
    கத²ம் ந ஜ்ஞேயம் = அறியாமல் இருப்பது ஏன்;
    ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?
    ________________________________________
    कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।
    धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत॥४०॥
    குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா: ஸநாதநா:|
    த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||
    குலக்ஷயே = குலநாசத்தினால்;
    ஸநாதநா: = தொன்று தொட்டு வருகின்ற;
    குலத⁴ர்மா: = குல தர்மங்கள்;
    ப்ரணஸ்²யந்தி = அழிகின்றன;
    த⁴ர்மே நஷ்டே = தர்மம் அழிவதில்;
    க்ருத்ஸ்நம் குலம் = குலம் முழுவதிலும்;
    அத⁴ர்ம: உத அபி ப⁴வதி = அதர்மமும் பரவுகிறது;
    குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?
    ________________________________________
    अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
    स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥
    அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய:|
    ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: ||1-41||
    அத⁴ர்ம: அபி ப⁴வாத் = அதர்மம் பரவுவதால்;
    க்ருஷ்ண = கண்ணா!;
    குலஸ்த்ரிய: = குலப் பெண்கள்;
    ப்ரது³ஷ்யந்தி = கெட்டுப் போகிறார்கள்;
    து³ஷ்டாஸு ஸ்த்ரீஷு = கெட்ட பெண்களால்;
    வர்ணஸங்கர: ஜாயதே = வர்ணக் கலப்பு உண்டாகிறது;
    வார்ஷ்ணேய = விருஷ்ணி குலத் தோன்றலே!
    கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.
    ________________________________________
    सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
    पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः॥४२॥
    ஸங்கரோ நரகாயைவ குலக்⁴நாநாம் குலஸ்ய ச|
    பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ³த³கக்ரியா: ||1-42||
    ஸங்கர: = குழப்பத்தால்;
    குலஸ்ய ச = குலத்தையும்;
    குலக்⁴நாநாம் = குல நாசம் செய்தவர்களையும்;
    நரகாய ஏவ = நரகத்துக்கே (கொண்டு செல்கிறது);
    பிண்ட³, த³கக்ரியா: லுப்த = பிண்டமும் சடங்குகளும் இன்றி;
    ஏஷாம் பிதர: ஹி = இவர்களுடைய முன்னோர்களும்;
    பதந்தி = வீழ்வர்
    அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.
    ________________________________________
    दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
    उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः॥४३॥
    தோ³ஷைரேதை: குலக்⁴நாநாம் வர்ணஸங்கரகாரகை:|
    உத்ஸாத்³யந்தே ஜாதித⁴ர்மா: குலத⁴ர்மாஸ்²ச ஸா²ஸ்²வதா: ||1-43||
    குலக்⁴நாநாம் = குலநாசம் செய்பவர்களின்;
    ஏதை: வர்ணஸங்கரகாரகை: தோ³ஷை = இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்;
    ஸா²ஸ்²வதா: = என்றும் உள்ள;
    ஜாதித⁴ர்மா: குலத⁴ர்மா ச = குல ஜாதி தருமங்கள்;
    உத்ஸாத்³யந்தே = அழிகின்றன;
    வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.
    ________________________________________
    उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन।
    नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम॥४४॥
    உத்ஸந்நகுலத⁴ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
    நரகே நியதம் வாஸோ ப⁴வதித்யநுஸு²ஸ்²ரும ||1-44||
    உத்ஸந்ந குலத⁴ர்மாணாம் = எடுபட்டுப் போன குல தருமங்கள்;
    மநுஷ்யாணாம் = மனிதர்களுக்கு;
    அநியதம் நரகே வாஸ: = அளவற்ற காலம் நரக வாசம்;
    ப⁴வதி = ஏற்படுகிறது;
    இதி அநுஸு²ஸ்²ரும = கேள்விப் படுகிறோம்;
    ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.
    ________________________________________
    अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
    यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः॥४५॥
    அஹோ ப³த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்|
    யத்³ராஜ்யஸுக²லோபே⁴ந ஹந்தும் ஸ்வஜநமுத்³யதா: ||1-45||
    அஹோ = அந்தோ;
    ப³த = பாவம்;
    வயம் மஹத் பாபம் கர்தும் = பெரும் பாவம் செய்வதற்கு நாம்;
    வ்யவஸிதா = முனைந்து இருக்கிறோம்;
    யத்³ ராஜ்ய ஸுக² லோபே⁴ந = ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு;
    ஸ்வஜநம் ஹந்தும் = சுற்றத்தாரைக் கொல்ல;
    உத்³யதா: = முனைந்து விட்டோம்;
    அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!
    ________________________________________
    यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
    धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्॥४६॥
    யதி³ மாமப்ரதீகாரமஸ²ஸ்த்ரம் ஸ²ஸ்த்ரபாணய:|
    தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் ப⁴வேத் ||1-46||
    அஸ²ஸ்த்ரம் = ஆயுதம் இன்றி;
    அப்ரதீகாரம் = எதிர்த்து போரிடாமல்;
    மாம் = என்னை;
    ஸ²ஸ்த்ரபாணய: = ஆயுதம் தாங்கிய;
    தா⁴ர்தராஷ்ட்ரா = திருதராஷ்டிரக் கூட்டத்தார்;
    யதி³ ரணே ஹந்யு = ஒருவேளை போரில் கொன்று விடினும்;
    தத் மே = அதில் எனக்கு;
    க்ஷேமதரம் ப⁴வேத் = நன்மையே ஆகிறது;
    கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.”
    ________________________________________
    सञ्जय उवाच
    एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत्।
    विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥४७॥
    ஸஞ்ஜய உவாச
    ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஸ²த்|
    விஸ்ருஜ்ய ஸஸ²ரம் சாபம் ஸோ²கஸம்விக்³நமாநஸ: ||1-47||
    ஸங்க்²யே = போர்க்களத்தில்;
    ஸோ²க ஸம்விக்³ந மாநஸ: = சோகத்தினால் கலங்கிய மனத்துடன்;
    அர்ஜுந: ஏவம் உக்த்வா = அர்ஜுனன் இவ்வாறு கூறி;
    ஸஸ²ரம் சாபம்= அம்பையும் வில்லையும்;
    விஸ்ருஜ்ய = எறிந்து விட்டு;
    ரதோ²பஸ்த² = தேர்த்தட்டில்;
    உபாவிஸ²த் = உட்கார்ந்தான்;
    சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.
    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादेऽर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्याय: || 1 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘அர்ஜுன விஷாத யோகம்’ எனப் பெயர் படைத்த
    முதல் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X