Announcement

Collapse
No announcement yet.

கீதை – இரண்டாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – இரண்டாவது அத்தியாயம்

    ஸாங்கிய யோகம்

    போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல


    ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:
    सञ्जय उवाच
    तं तथा क्रिपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्।
    विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः॥१॥
    ஸஞ்ஜய உவாச
    தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
    விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||
    ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
    ததா² க்ரிபயா ஆவிஷ்டம் = அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
    அஸ்²ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்= நீர் நிரம்பிய விழிகளுடன்
    விஷீத³ந்தம் = சோகத்தோடு கூடிய
    தம் = அவனை (அர்ஜுனனை)
    மது⁴ஸூத³ந: இத³ம் வாக்யம் உவாச= மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்
    அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:
    ________________________________________
    श्रीभगवानुवाच
    कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्।
    अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन॥२॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
    அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||
    ஸ்ரீப⁴க³வான் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    அர்ஜுந! = அர்ஜுனா
    விஷமே = தகாத சமயத்தில்
    குத த்வா இத³ம் கஸ்²மலம் ஸமுபஸ்தி²தம் = எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
    அநார்யஜுஷ்டம் = ஆரியருக்கு தகாதது
    அஸ்வர்க்³யம் = வானுலகை தடுப்பது
    அகீர்திகரம் = புகழையும் தராதது
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
    ________________________________________
    क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते।
    क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप॥३॥
    க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த² நைதத்த்வய்யுபபத்³யதே|
    க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப ||2-3||
    க்லைப்³யம் மா ஸ்ம க³ம: = அலியின் தன்மையை அடையாதே
    ஏதத் ந உபபத்³யதே = இது பொருத்தமன்று
    க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வா = இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
    உத்திஷ்ட² பரந்தப = எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே
    பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!
    ________________________________________
    अर्जुन उवाच
    कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन।
    इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन॥४॥
    அர்ஜுந உவாச
    கத²ம் பீ⁴ஷ்மமஹம் ஸங்க்²யே த்³ரோணம் ச மது⁴ஸூத³ந|
    இஷுபி⁴: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத³ந ||2-4||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    அஹம் ஸங்க்²யே = நான் போரில்
    கத²ம் இஷுபி⁴: = எவ்வாறு அம்புகளால்
    பூஜார்ஹௌ பீ⁴ஷ்மம் த்³ரோணம் ச = தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
    ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்ப்பேன்
    அரிஸூத³ந = பகைவர்களை அழிப்பவனே
    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!
    ________________________________________
    गुरूनहत्वा हि महानुभावाञ्छ्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके।
    हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान्॥५॥
    கு³ரூநஹத்வா ஹி மஹாநுபா⁴வாஞ்ச்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யமபீஹ லோகே|
    ஹத்வார்த²காமாம்ஸ்து கு³ரூநிஹைவ பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந்ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ||2-5||
    மஹாநுபா⁴வாந் கு³ரூந் அஹத்வா= பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
    இஹ லோகே = இவ்வுலகத்தில்
    பை⁴க்ஷ்யம் அபி = பிச்சையெடுத்து
    போ⁴க்தும் ஸ்ரேய: = உண்பதும் நன்று
    ஹி = ஏனெனில்
    அர்த²காமாந் கு³ரூந் ஹத்வா = பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
    இஹ = உலகில்
    பு⁴ஞ்ஜீய = துய்க்கும்
    போ⁴கா³ந் ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ஏவ = இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்
    பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.
    ________________________________________
    न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः।
    यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः॥६॥
    ந சைதத்³வித்³ம: கதரந்நோ க³ரீயோ யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
    யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா: ||2-6||
    ந: = நமக்கு
    கதரத் க³ரீயோ = இவற்றுள் எது மேன்மை
    யத்³வா ஜயேம = இவர்களை வெல்லுதல்
    யதி³ வா நோ ஜயேயு: = இவர்கள் நம்மை வெல்லுதல்
    ந வித்³ம: = விளங்கவில்லை
    யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம =எவரைக் கொன்றபின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
    தே தா⁴ர்தராஷ்ட்ரா: ஏவ = அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
    ப்ரமுகே² அவஸ்தி²தா: = முன்னே நிற்கிறார்கள்
    மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.
    ________________________________________
    कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः।
    यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्॥७॥
    கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:|
    யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே ஸி²ஷ்யஸ்தேऽஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||
    கார்பண்யதோ³ஷ உபஹத ஸ்வபா⁴வ: = கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
    த⁴ர்மஸம்மூட⁴சேதா: = அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
    த்வாம் ப்ருச்சா²மி = உன்னைக் கேட்கிறேன்
    யத் ஸ்²ரேய: ஸ்யாத் = எது நல்லது
    தத் மே நிஸ்²சிதம் ப்³ரூஹி = அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
    அஹம் தே ஸி²ஷ்ய = நான் உங்கள் சீடன்
    த்வாம் ப்ரபந்நம் மாம் ஸா²தி⁴ = உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக
    சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.
    ________________________________________
    न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्।
    अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्॥८॥
    ந ஹி ப்ரபஸ்²யாமி மமாபநுத்³யாத்³யச்சோ²கமுச்சோ²ஷணமிந்த்³ரியாணாம்|
    அவாப்ய பூ⁴மாவஸபத்நம்ருத்³த⁴ம் ராஜ்யம் ஸுராணாமபி சாதி⁴பத்யம் ||2-8||
    ஹி = ஏனெனில்
    பூ⁴மௌ = பூமியில்
    அஸபத்நம் = எதிரிகளற்ற
    ருத்³த⁴ம் = செழிப்பான
    ஸுராணாம் ச அதி⁴பத்யம் ராஜ்யம் = வானோர்மிசை ஆட்சி
    அவாப்ய அபி = அடைந்தாலும்
    யத் மம இந்த்³ரியாணாம் = என்னுடைய புலன்களை
    உச்சோ²ஷணம் சோகம் = வாட வைக்கின்ற சோகம்
    அபநுத்³யாத் = போக்கடிக்கும்
    ந ப்ரபஸ்²யாமி = காணவில்லை
    பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
    ________________________________________
    सञ्जय उवाच
    एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः।
    न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह॥९॥
    ஸஞ்ஜய உவாச
    ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
    ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||
    ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
    பரந்தப: = எதிரிகளை எரிப்பவனே!
    கு³டா³கேஸ²: ஹ்ருஷீகேஸ²ம் ஏவம் உக்த்வா = உறக்கத்தை வென்றவன் (அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
    ந யோத்ஸ்யே இதி ஹ கோ³விந்த³ம் உக்த்வா = இனி போர் புரியேன் என்று கொவிந்தனிடம் சொல்லி
    தூஷ்ணீம் ப³பூ⁴வ = மௌனம் ஆனான்
    சஞ்ஜயன் சொல்லுகிறான்: “பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் ‘போரினிப் புரியேன்’ என்று வாய்புதைத்திருந்தான்.”
    ________________________________________
    तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
    सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः॥१०॥
    தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
    ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||
    பா⁴ரத = பாரதா
    உப⁴யோ: ஸேநயோ: மத்⁴யே = இரண்டு படைகளுக்கும் நடுவே
    விஷீத³ந்தம்= துயருற்று இருக்கும்
    தம் = அவனிடம் (அர்ஜுனன்)
    ப்ரஹஸன் இவ= புன்னகை பூத்து
    இத³ம் வச: உவாச = இவ்வசனம் கூறினான்
    பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:
    ________________________________________
    श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
    गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः॥११॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
    க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
    த்வம் = நீ
    அஸோ²ச்யாந் = துயர் படத் தகாதார்
    அந்வஸோ²ச: = வருந்துகிறாய்
    ப்ரஜ்ஞாவாதாந் = பண்டிதர்களைப் போன்று
    பா⁴ஷஸே = பேசுகிறாய்
    க³தாஸூந் = இறந்தார்க் கேனும்
    அக³தாஸூந் = இருந்தார்க் கேனும்
    பண்டி³தா: ந அநுஸோ²சந்தி = பண்டிதர்கள் வருந்துவது இல்லை
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.”
    ________________________________________
    नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
    न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥
    நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
    ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||
    ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ = எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்
    ந த்வம் இமே ஜநாதி⁴பா: ச ந ஏவ = நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே
    அத: பரம் = இனி மேலும்
    வயம் ஸர்வே ந ப⁴விஷ்யாம: = நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
    இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.
    ________________________________________
    देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
    तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥
    தே³ஹிநோऽஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
    ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||
    யதா² தே³ஹிந: = எப்படி ஆத்மாவுக்கு
    அஸ்மிந் தே³ஹே = இந்த உடலில்
    கௌமாரம் யௌவநம் ஜரா = பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும்
    ததா² தே³ஹாந்தரப்ராப்தி = அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
    தீ⁴ர தத்ர ந முஹ்யதி = தீரன் அதில் கலங்கமாட்டான்
    ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.
    ________________________________________
    मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
    आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत॥१४॥
    மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
    ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    ஸீ²தோஷ்ண ஸுக² து³:க²தா³: = குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்
    மாத்ராஸ்பர்ஸா²: து = இயற்கையின் தீண்டுதல்கள்
    ஆக³மாபாயிந: = உண்டாகி அழிபவை
    அநித்யா: = அநித்யமானவை
    பா⁴ரத தாந் ஸ்திதிக்ஷஸ்வ = பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
    குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
    ________________________________________
    यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
    समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते॥१५॥
    யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
    ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||
    ஹி = ஏனெனில்
    புருஷர்ஷப = புருஷர்களில் சிறந்தவனே
    ஸமது³:க²ஸுக²ம் = இன்பமுந்துன்பமும் நிகரென
    யம் தீ⁴ரம் புருஷம் = எந்த தீர புருஷன்
    ந வ்யத²யந்தி = கலங்க வைப்பதில்லையோ
    ஸ: அம்ருதத்வாய கல்பதே = அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்
    யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.
    ________________________________________
    नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
    उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥
    நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
    உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||
    அஸத: பா⁴வ ந வித்³யதே = இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை
    ஸத: அபா⁴வ ந வித்³யதே = உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை
    அநயோ உப⁴யோ அபி அந்த: = இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
    தத்த்வத³ர்ஸி²பி⁴: த்³ருஷ்டா = தத்துவ தரிசிகள் உணர்வார்
    இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
    ________________________________________
    अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
    विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति॥१७॥
    அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
    விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||
    அவிநாஸி² து = அழிவற்றது தான் என்று
    தத்³ வித்³தி⁴: = அதை அறிந்து கொள்
    யேந இத³ம் ஸர்வம் = எதனால் இவை அனைத்தும்
    ததம் = வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    அஸ்ய அவ்யயஸ்ய = அந்த அழிவற்றதற்கு
    விநாஸ²ம் கர்தும் கஸ்²சித் ந அர்ஹதி = அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது
    இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.
    ________________________________________
    अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
    अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥१८॥
    அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
    அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||
    அநாஸி²ந: = அழிவற்றான்
    அப்ரமேயஸ்ய = அளவிடத்தகாதான்
    நித்யஸ்ய = நித்தியன்
    ஸ²ரீரிண: இமே தே³ஹா = ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்
    அந்தவந்த உக்தா: = அழியக் கூடியவையாக என்பர்
    தஸ்மாத்³ யுத்⁴யஸ்வ பா⁴ரத = ஆதலால் பாரதா, போர் செய்
    ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.
    ________________________________________
    य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
    उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते॥१९॥
    ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
    உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||
    ய: ஏநம் = எவன் இந்த (ஆத்மாவை)
    ஹந்தாரம் வேத்தி = கொல்பவனாக நினைக்கிறானோ
    ய: ஏநம் ஹதம் மந்யதே = எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ
    தௌ உபௌ⁴ = அந்த இருவருமே
    ந விஜாநீத: = அறியாதவர்கள்
    அயம் ந ஹந்தி = இவன் கொல்லுவதுமில்லை
    ந ஹந்யதே = கொலையுண்டதுமில்லை
    இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் -இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;
    ________________________________________
    न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः।
    अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे॥२०॥
    ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
    அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||
    அயம் கதா³சித் = இந்த ஆத்மா எப்போதும்
    ந ஜாயதே வா ம்ரியதே = பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை
    பூ⁴த்வா பூ⁴ய: ந ப⁴விதா = முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை
    அயம் அஜ: நித்ய: ஸா²ஸ்²வத: புராண: = இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்
    ஸ²ரீரே ஹந்யமாநே ந ஹந்யதே = உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
    எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
    ________________________________________
    वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
    कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥२१॥
    வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
    கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||
    பார்த² = பார்த்தா!
    ஏநம் = இந்த பொருள் (ஆத்மா)
    அவ்யயம் = மாறாதது
    ஆவிநாஸிநம் = அழிவற்றது
    நித்யம் = என்றும் உளது
    அஜம் = பிறப்பற்றது
    ய: புருஷ: வேத³ = எந்த மனிதன் உணர்கிறானோ
    ஸ: கத²ம் கம் கா⁴தயதி ஹந்தி = அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?
    இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
    To be continued
Working...
X