Announcement

Collapse
No announcement yet.

கீதை – இரண்டாவது அத்தியாயம் Countinued,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – இரண்டாவது அத்தியாயம் Countinued,

    கீதை – இரண்டாவது அத்தியாயம்
    Countinued,
    वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
    तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥
    வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
    ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||
    யதா² நர: = எப்படி மனிதன்
    ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய = பழைய துணிகளை நீக்கி விட்டு
    நவாநி க்³ருஹ்ணாதி = புதியதை எடுத்துக் கொள்கிறானோ
    ததா² தேஹி ஜீர்ணாநி ஸ²ரீராணி விஹாய = அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து
    அந்யாநி நவாநி ஸம்யாதி = வேறு புதியதை அடைகிறான்
    நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
    ________________________________________
    नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
    न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥२३॥
    நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
    ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||
    ஏநம் ஸ²ஸ்த்ராணி ந சி²ந்த³ந்தி = இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை
    ஏநம் பாவக: ந த³ஹதி = இவனை நெருப்பு எரிப்பதில்லை
    ஏநம் ஆப: ந க்லேத³யந்தி = இவனை தண்ணீர் நனைப்பதில்லை
    மாருத: ச ந ஸோ²ஷயதி = காற்றும் உலர்த்துவதில்லை
    இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
    ________________________________________
    अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च।
    नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः॥२४॥
    அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
    நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||
    அயம் அச்சே²த்³ய: = இவன் பிளத்தற்கரியவன்
    அயம் அதா³ஹ்ய: = எரிக்கப் பட முடியாதவன்
    அக்லேத்³ய: = நனைக்கப் படமுடியாதவன்
    அஸோ²ஷ்ய: = உலர்த்தப் படமுடியாதவன்
    நித்ய: ஸர்வக³த: = நித்தியன்; எங்கும் நிறைந்தவன்
    ஸ்தா²ணு அசல: = உறுதி உடையவன்; ஆசையாதான்
    ஸநாதந: = என்றும் இருப்பான்
    பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.
    ________________________________________
    अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
    तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि॥२५॥
    அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
    தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||
    அயம் அவ்யக்த: = இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்
    அயம் அசிந்த்ய: = மனத்தால் சிந்தனைக்கு அரியவன்
    அயம் அவிகார்ய: = மாறுதல் இல்லாதவன்
    உச்யதே = என்று கூறப் படுகிறது
    தஸ்மாத் ஏநம் ஏவம் விதி³த்வா = இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
    அநுஸோ²சிதும் அர்ஹஸி = வருத்தப் படாமல் இரு
    “தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”
    ________________________________________
    अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
    तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि॥२६॥
    அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
    ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||
    அத² ச த்வம் = ஆயினும்
    ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே = இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்
    மஹாபா³ஹோ = நீண்ட கைகளை உடையவனே
    ததா²பி த்வம் ஏவம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = அப்போதும் வருத்தப்படுவது தகாது
    அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.
    ________________________________________
    जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
    तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥
    ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
    தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||
    ஜாதஸ்ய ம்ருத்யு: த்⁴ருவ: ஹி = பிறந்தவன் சாவது உறுதி எனில்
    ம்ருதஸ்ய ச ஜந்ம த்⁴ருவம் = செத்தவன் பிறப்பது உறுதி எனில்
    தஸ்மாத் அபரிஹார்யே அர்தே² = ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக
    த்வம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = நீ துயரப் படுவது தகாது
    பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.
    ________________________________________
    अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
    अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना॥२८॥
    அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
    அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||
    பா⁴ரத = பாரதா!
    பூ⁴தாநி அவ்யக்தாதீ³நி = உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை
    அவ்யக்தநித⁴நாநி ஏவ = இறுதியும் தெளிவில்லை
    வ்யக்தமத்⁴யாநி = நடுநிலைமை தெளிவுடையது
    தத்ர கா பரிதே³வநா = இதில் துயற்படுவது என்ன ?
    பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?
    ________________________________________
    आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
    आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥
    ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
    ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||
    கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்
    ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = வியப்பெனக் காண்கிறான்
    ஆஸ்²சர்யவத் வத³தி = வியப்பென ஒருவன் சொல்கிறான்
    ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = வியப்பென ஒருவன் கேட்கிறான்
    கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்
    இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
    ________________________________________
    देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत।
    तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि॥३०॥
    தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
    தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||
    பா⁴ரத = பாரதா
    அயம் தே³ஹீ = இந்த ஆத்மா
    ஸர்வஸ்ய தே³ஹே = எல்லா உடலிலும்
    நித்யம் அவத்⁴ய = எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்
    தஸ்மாத் ஸர்வாணி பூ⁴தாநி = ஆகவே எந்த உயிரின் பொருட்டும்
    த்வம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = நீ வருந்துதல் தகாது
    பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!
    ________________________________________
    स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि।
    धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते॥३१॥
    ஸ்வத⁴ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|
    த⁴ர்ம்யாத்³தி⁴ யுத்³தா⁴ச்ச்²ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||
    ஸ்வத⁴ர்மம் சாவேக்ஷ்ய அபி = ஸ்வதர்மத்தைப் கருதினாலும்
    விகம்பிதும் ந அர்ஹஸி = நீ நடுங்குதல் தகாது
    க்ஷத்ரியஸ்ய த⁴ர்ம்யாத் யுத்³தா⁴த் அந்யத் = மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
    ஸ்ரேய: ந வித்³யதே = உயர்ந்ததொரு நன்மை இல்லை
    ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.
    ________________________________________
    यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।
    सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥
    யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்|
    ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||
    பார்த² = பார்த்தா;
    யத்³ருச்ச²யா உபபந்நம் = தானே வந்திருப்பதும்
    அபாவ்ருதம் ஸ்வர்க³த்³வாரம் = திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்
    ஈத்³ருஸ²ம் யுத்³த⁴ம் = இத்தகைய போர்
    ஸுகி²ந: க்ஷத்ரியா: லப⁴ந்தே = பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்
    தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!
    ________________________________________
    अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि।
    ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि॥३३॥
    அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
    தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||
    அத² = அன்றி
    இமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் = இந்தத் தர்மயுத்தத்தை
    த்வம் ந கரிஷ்யஸி சேத் = நீ நடத்தாமல் விடுவாயானால்
    தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா = அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று
    பாபம் அவாப்ஸ்யஸி = பாவத்தையடைவாய்
    அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.
    ________________________________________
    अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
    सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते॥३४॥
    அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
    ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||
    பூ⁴தாநி ச = உலகத்தாரும்
    தே அவ்யயாம் = உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய
    அகீர்திம் அபி கத²யிஷ்யந்தி = வசை உரைப்பார்கள்
    ஸம்பா⁴விதஸ்ய = புகழ் கொண்டோன்
    அகீர்தி: மரணாத் அதிரிச்யதே = அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
    உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
    ________________________________________
    भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
    येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्॥३५॥
    ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
    யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||
    ச யேஷாம் த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா = மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து
    லாக⁴வம் யாஸ்யஸி = தாழ்மையாய் அடைவாயோ
    மஹாரதா²: த்வாம் = அந்த மகாரதர்கள் உன்னை
    ப⁴யாத் ரணாத் உபரதம் = பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக
    மம்ஸ்யந்தே = கருதுவார்கள்
    நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.
    ________________________________________
    अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः।
    निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्॥३६॥
    அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
    நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||
    தவ அஹிதா: = உனக்கு வேண்டாதார்
    தவ ஸாமர்த்²யம் நிந்த³ந்த = உன் திறமையைப் பழிப்பார்கள்
    ப³ஹூந் அவாச்யவாதா³ம் ச = சொல்லத் தகாத வார்த்தைகள் பல
    வதி³ஷ்யந்தி = சொல்லுவார்கள்
    தத: து³:க²தரம் நு கிம் = இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது
    உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
    ________________________________________
    हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
    तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥
    ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
    தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||
    ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் = கொல்லப்படினோ வானுல கெய்துவாய்
    ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம் = வென்றால் பூமியாள்வாய்
    தஸ்மாத் கௌந்தேய = ஆகவே குந்தி மைந்தனே
    க்ருதநிஸ்²சய: யுத்³தா⁴ய உத்திஷ்ட² = நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு
    கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
    ________________________________________
    सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
    ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥
    ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
    ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||
    ஸுக² – து³:கே² = இன்பம், துன்பம்
    லாப⁴ – அலாப⁴= பேறு, இழவு
    ஜய அஜயௌ = வெற்றி, தோல்வி
    ஸமே க்ருத்வா = நிகரெனக் கொண்டு
    ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ = அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக
    ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி = இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்
    இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
    ________________________________________
    एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
    बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥
    ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
    பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||
    பார்த² = பார்த்தா
    ஏஷா பு³த்³தி⁴ தே = இந்த புத்தி (அறிவுரை) உனக்கு
    ஸாங்க்²யே அபி⁴ஹிதா = ஸாங்கிய வழிப்படி சொன்னேன்
    து இமாம் யோகே³ ஸ்²ருணு = இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்
    யயா பு³த்³த்⁴யா யுக்த: =இந்தப் புத்தி கொண்டவன்
    கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி = கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்
    இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
    ________________________________________
    नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
    स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥
    நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
    ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||
    இஹ = இதில் (கர்ம யோகத்தில்)
    அபி⁴க்ரமநாஸ: ந அஸ்தி = விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை
    ப்ரத்யவாய: ந வித்³யதே = நேரெதிரான விளைவும் இல்லை
    அஸ்ய த⁴ர்மஸ்ய ஸ்வல்பம் அபி = இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்
    மஹதோ ப⁴யாத் த்ராயதே = பேரச்சத்தினின்று காப்பாற்றும்
    இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
    ________________________________________
    व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
    बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥
    வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
    ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||
    குருநந்த³ந = குருகுலத் தோன்றலே!
    இஹ வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ ஏகா = இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது
    அவ்யவஸாயிநாம் = உறுதியில்லாதோரின்
    பு³த்³த⁴ய: = புத்திகள்
    ப³ஹுஸா²கா² = பல கிளைப்பட்டது
    அநந்தா: ச = முடிவற்றது
    குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
    ________________________________________
    यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
    वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥
    யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
    வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||
    பார்த² = பார்த்தா!
    வேத³வாத³ரதா: = வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்
    புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்ய = பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்
    ந அந்யத் அஸ்தி இதி வாதி³ந: = தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்
    வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
    ________________________________________
    कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
    क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥
    காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
    க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||
    காமாத்மாந: = ஆசைகளில் மூழ்கியவர்கள்
    ஸ்வர்க³பரா: = சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
    ஜந்மகர்மப²லப்ரதா³ம் = பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்
    போ⁴கை³ஸ்²வர்யக³திம் = போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்
    க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் = பலவகையான கிரியைகள்
    இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
    ________________________________________
    भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
    व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥
    போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
    வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||
    தயா அபஹ்ருத சேதஸாம் = அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு
    போ⁴க³ ஐஸ்²வர்ய ப்ரஸக்தாநாம் = போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்
    வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: = நிச்சய புத்தி
    ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே = சமாதியில் நிலைபெறாது
    இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.
    ________________________________________
    त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
    निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥
    த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
    நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||
    வேதா³ = வேதங்கள்
    த்ரைகு³ண்ய விஷயா = மூன்று குணங்களுக்குட்பட்டன
    நிஸ்த்ரைகு³ண்யோ = மூன்று குணங்களையும் கடந்தோனாக
    நிர்த்³வந்த்³வ = இருமைகளற்று
    நித்யஸத்த்வஸ்த² = எப்போதும் உண்மையில் நின்று
    நிர்யோக³க்ஷேம = யோக க்ஷேமங்களைக் கருதாமல்
    ஆத்மவாந் ப⁴வ = ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக
    மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
    ________________________________________
    यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
    तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥
    யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
    தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||
    ஸர்வத: ஸம்ப்லுத உத³கே = எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்
    யாவாந் அர்த² உத³பாநே = ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது
    ஸர்வேஷு வேதே³ஷு = எல்லா வேதன்களினாலும்
    விஜாநத: ப்³ராஹ்மணஸ்ய = ஞானமுடைய பிராமணனுக்கு
    தாவாந் = அவ்வளவு தான் (பயன்)
    எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
    To be continued
Working...
X