Announcement

Collapse
No announcement yet.

கீதை – இரண்டாவது அத்தியாயம் Continued,2[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – இரண்டாவது அத்தியாயம் Continued,2[3]

    கீதை – இரண்டாவது அத்தியாயம்
    Continued,
    कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
    मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

    கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
    மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||
    தே கர்மணி ஏவ அதி⁴கார = தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு
    கதா³சந மா ப²லேஷு = எப்போதுமே பலன்களில் இல்லை
    கர்மப²லஹேது மா பூ⁴ = செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே
    தே அகர்மணி = உனக்கு கர்மங்களை ஆற்றாமல்
    ஸங்க³: மா அஸ்து = இருப்பதிலும் பற்று கூடாது
    தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
    ________________________________________
    योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय।
    सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते॥४८॥
    யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
    ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||
    த⁴நஞ்ஜய = அர்ஜுனா!
    யோக³ஸ்த²: = யோகத்தில் நின்று
    ஸங்க³ம் த்யக்த்வா = பற்றை நீக்கி
    ஸித்³தி⁴ அஸித்³த⁴யோ: ஸமோ பூ⁴த்வா = வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
    கர்மாணி குரு = தொழில்களைச் செய்க
    ஸமத்வம் யோக³ உச்யதே = நடுநிலையே யோகமெனப்படும்
    தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
    ________________________________________
    दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय।
    बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः॥४९॥
    தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
    பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||
    த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா!
    பு³த்³தி⁴யோகா³த் கர்ம = புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்
    தூ³ரேண அவரம் = நெடுந்தொலைவு தாழ்ந்தது
    பு³த்³தௌ⁴ ஸ²ரணம் அந்விச்ச² = புத்தியைச் சரணடை
    ப²லஹேதவ: க்ருபணா: = பயனைக் கருதுவோர் லோபிகள்
    தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.
    ________________________________________
    बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
    तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥
    பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
    தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||
    பு³த்³தி⁴யுக்த: = புத்தியுடையவன்
    ஸுக்ருத து³ஷ்க்ருதே = நற்செய்கை தீச்செய்கை
    உபே⁴ இஹ ஜஹாதி = இரண்டையும் இங்கு துறக்கிறான்
    தஸ்மாத்³ யோகா³ய யுஜ்யஸ்வ = ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு
    யோக³: கர்மஸு கௌஸ²லம் = யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்)
    புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
    ________________________________________
    कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
    जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥
    கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
    ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||
    ஹி பு³த்³தி⁴யுக்தா மநீஷிண: = ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்
    ப²லம் த்யக்த்வா = பயனைத் துறந்து
    ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: = பிறவித் தளை நீக்கி
    அநாமயம் பத³ம் க³ச்ச²ந்தி = மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்
    புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
    ________________________________________
    यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।
    तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥
    யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|
    ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||
    யதா³ தே பு³த்³தி⁴ = எப்போது உனது புத்தி
    மோஹகலிலம் = மோகக் குழப்பத்தை
    வ்யதிதரிஷ்யதி = கடந்து செல்லுகிறதோ
    ததா³ = அப்போது
    ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச = கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்
    நிர்வேத³ம் க³ந்தாஸி = வேதனையேற்படாது
    உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
    ________________________________________
    श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।
    समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि॥५३॥
    ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
    ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||
    ஸ்²ருதிவிப்ரதிபந்நா = கேள்வியிலே கலக்கமுறாததாய்
    தே பு³த்³தி⁴ = உனது புத்தி
    ஸமாதௌ⁴ = சமாதி நிலையில்
    நிஸ்²சலா அசலா = உறுதிகொண்டு, அசையாது
    யதா³ ஸ்தா²ஸ்யதி = நிற்குமாயின்
    ததா³ யோக³ம் அவாப்ஸ்யஸி = அப்போது யோகத்தை அடைவாய்
    உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
    ________________________________________
    अर्जुन उवाच
    स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।
    स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्॥५४॥
    அர்ஜுந உவாச
    ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|
    ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    கேஸ²வ = கேசவா!
    ஸமாதி⁴ஸ்த²ஸ்ய ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா = உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
    ஸ்தி²ததீ⁴: = ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
    கிம் ப்ரபா⁴ஷேத = என்ன சொல்வான்?
    கிம் ஆஸீத = எப்படியிருப்பான்?
    கிம் வ்ரஜேத = எதனையடைவான்?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
    ________________________________________
    श्रीभगवानुवाच
    प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान्।
    आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते॥५५॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|
    ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    பார்த² = அர்ஜுனா!
    மநோக³தாந் ஸர்வாந் காமாந் = மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்
    ப்ரஜஹாதி = துறக்கிறான்
    யதா³ ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட: = தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்
    ததா³ ஸ்தி²தப்ரஜ்ஞ: உச்யதே = அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
    ________________________________________
    दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः।
    वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते॥५६॥
    து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|
    வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||
    து³:கே²ஷு அநுத்³விக்³நமநா: = துன்பங்களிலே மனங்கொடாதவனாய்
    ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ: = இன்பங் களிலே ஆவலற்ற வனாய்
    வீதராக³ப⁴யக்ரோத⁴: = அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
    முநி ஸ்தி²ததீ⁴ உச்யதே = அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப
    “துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”
    ________________________________________
    यः सर्वत्रानभिस्*नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम्।
    नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५७॥
    ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|
    நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||
    ய: = எவன்
    ஸு²ப⁴ அஸு²ப⁴ம் = நல்லதும் கெட்டதும்
    ப்ராப்ய = அடைந்து
    ந அபி⁴நந்த³தி = மகிழ்வதில்லை
    ந த்³வேஷ்டி = வெறுப்பதும் இல்லை
    ஸர்வத்ர அநபி⁴ஸ்நேஹ = பகைப்பதுமின்றியிருப்பானோ
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது
    எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
    ________________________________________
    यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः।
    इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५८॥
    யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|
    இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||
    கூர்ம ஸர்வஸ²: ச = ஆமை தன் அவயங்களையும்
    ஸம்ஹரதே இவ = இழுத்துக்கொள்ளுவது போல்
    அர்தே²ப்⁴ய இந்த்³ரிய = விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை
    யதா³ அயம் = எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது
    ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.
    ________________________________________
    विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः।
    रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते॥५९॥
    விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|
    ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||
    நிராஹாரஸ்ய தே³ஹிந: = கவராத ஜீவனிடமிருந்து
    விஷயா விநிவர்தந்தே = விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன
    ரஸவர்ஜம் = (எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை
    அஸ்ய பரம் த்³ருஷ்ட்வா = இவன் பரம்பொருளைக் கண்டதும்
    ரஸ: அபி நிவர்ததே = அச்சுவையுந் தீர்ந்துவிடும்
    தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
    ________________________________________
    यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।
    इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः॥६०॥
    யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|
    இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந: ||2-60||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    ஹி = ஆனால்
    யதத: விபஸ்²சித: = முயற்சியுள்ள புத்திசாலியான
    புருஷஸ்ய மந: அபி = புருஷனின் மனதிலே கூட
    ப்ரமாதீ²நி இந்த்³ரியாணி = கலக்குபவையான இந்திரியங்கள்
    ப்ரஸப⁴ம் ஹரந்தி = வலிய வாரிச் செல்கின்றன
    குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
    ________________________________________
    तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।
    वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥
    தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|
    வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||
    தாநி ஸர்வாணி ஸம்யம்ய = அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி
    மத்பர: = என்னைப் பரமாகக் கொண்டு
    யுக்த ஆஸீத = யோகத்தில் அமர்ந்தவனாய்
    யஸ்ய இந்த்³ரியாணி வஸே² = எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது
    அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
    ________________________________________
    ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।
    सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥
    த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
    ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே ||2-62||
    பும்ஸ: விஷயாத் த்⁴யாயத = மனிதன் விஷயங்களைக் கருதும் போது
    தேஷூ ஸங்க³: உபஜாயதே = அவற்றில் பற்றுதலுண்டாகிறது
    ஸங்கா³த் காம: ஸஞ்ஜாயதே = பற்றுதலால் விருப்பமுண்டாகிறது
    காமாத் க்ரோத⁴: அபி⁴ஜாயதே = விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
    மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
    ________________________________________
    क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः।
    स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति॥६३॥
    க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|
    ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||
    க்ரோதா⁴த் ஸம்மோஹ: ப⁴வதி = சினத்தால் மயக்கம் உண்டாகிறது
    ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்⁴ரம: = மயக்கத்தால் நினைவு தவறுதல்
    ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த் பு³த்³தி⁴ நாஸ²= நினைவு தவறுதலால் புத்தி நாசம்
    பு³த்³தி⁴நாஸா²த் ப்ரணஸ்²யதி = புத்தி நாசத்தால் அழிகிறான்.
    சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.
    ________________________________________
    रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।
    आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति॥६४॥
    ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|
    ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||
    விதே⁴யாத்மா = தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்)
    ராக³ த்³வேஷ வியுக்தை: = விழைதலும் பகைத்தலுமின்றி
    ஆத்மவஸ்²யை இந்த்³ரியை: = தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
    விஷயாந் சரந் = போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு
    ப்ரஸாத³ம் அதி⁴க³ச்ச²தி = உள்ளத் தெளிவை அடைகிறான்
    விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
    ________________________________________
    प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।
    प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते॥६५॥
    ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|
    ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே ||2-65||
    ப்ரஸாதே³ = உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்
    ஸர்வது³:கா²நாம் = எல்லாத் துன்பங்களுக்கும்
    ஹாநி: உபஜாயதே = அழிவு ஏற்படுகிறது
    ப்ரஸந்ந சேதஸ: = சித்தம் சாந்தி பெற்ற மனிதன்
    பு³த்³தி⁴ ஆஸு ஹி பர்யவதிஷ்ட²தே = புத்தி விரைவிலே நிலைப்படுகிறது
    சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
    ________________________________________
    नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।
    न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्॥६६॥
    நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|
    ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் ||2-66||
    அயுக்தஸ்ய = யோகமில்லாதவனுக்கு
    பு³த்³தி⁴ நாஸ்தி = புத்தியில்லை
    அயுக்தஸ்ய ந பா⁴வநா ச = யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை
    அபா⁴வயத: ந ஸா²ந்தி ச = மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை
    அஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் = சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
    யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
    ________________________________________
    इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते।
    तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि॥६७॥
    இந்த்³ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீ⁴யதே|
    தத³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப⁴ஸி ||2-67||
    ஹி = ஏனெனில்
    அம்ப⁴ஸி நாவம் வாயு: ஹரதி இவ = கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்
    சரதாம் இந்த்³ரியாணாம் = (போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
    யத் மந: அநுவிதீ⁴யதே = மனமும் ஒட்டி இருக்கிறதோ
    தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி = அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது
    இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.
    ________________________________________
    तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः।
    इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६८॥
    தஸ்மாத்³யஸ்ய மஹாபா³ஹோ நிக்³ருஹீதாநி ஸர்வஸ²:|
    இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-68||
    மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
    தஸ்மாத் = ஆகையால்
    யஸ்ய இந்த்³ரியாணி = எவனுடைய புலன்கள்
    இந்த்³ரிய அர்தே²ப்⁴ய = புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
    நிக்³ருஹீதாநி = மீட்கப் பட்டு விட்டதோ
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனறிவே நிலைகொண்டது
    ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
    ________________________________________
    या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी।
    यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः॥६९॥
    யா நிஸா² ஸர்வபூ⁴தாநாம் தஸ்யாம் ஜாக³ர்தி ஸம்யமீ |
    யஸ்யாம் ஜாக்³ரதி பூ⁴தாநி ஸா நிஸா² பஸ்²யதோ முநே: ||2-69||
    ஸர்வபூ⁴தாநாம் யா நிஸா² = எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்
    தஸ்யாம் ஸம்யமீ ஜாக³ர்தி = (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்
    யஸ்யாம் பூ⁴தாநி ஜாக்³ரதி = மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ
    பஸ்²யத: முநே: ஸா நிஸா² = பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு
    எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
    ________________________________________
    आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।
    तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥
    ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
    தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||
    யத்³வத் = எவ்விதம்
    ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
    ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
    தத்³வத் = அதே விதமாக
    யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
    ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
    காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்
    கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
    ________________________________________
    विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः।
    निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति॥७१॥
    விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்²சரதி நி:ஸ்ப்ருஹ:|
    நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸா²ந்திமதி⁴க³ச்ச²தி ||2-71||
    ய: புமாந் = எந்த மனிதன்
    ஸர்வாந் காமாந் விஹாய = எல்லா இன்பங்களையும் துறந்து
    நிர்மம: நிரஹங்கார: = எனதென்பதற்றான், யானென்பதற்றான்
    நி:ஸ்ப்ருஹ: சரதி = இச்சையற்றான்
    ஸ ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = அவனே சாந்தி நிலை அடைகிறான்
    இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.
    ________________________________________
    एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति।
    स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति॥७२॥
    ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: பார்த² நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி|
    ஸ்தி²த்வாஸ்யாமந்தகாலேऽபி ப்³ரஹ்மநிர்வாணம்ருச்ச²தி ||2-72||
    பார்த² ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: = பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி
    ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி = இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை
    அந்தகாலே அபி = இறுதிக் காலத்திலேனும்
    அஸ்யாம் ஸ்தி²த்வா = இதில் நிலை கொண்டு
    ப்³ரஹ்ம நிர்வாணம் ருச்ச²தி = பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
    பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे साङ्खययोगो नाम द्वितीयोऽध्याय: || 2 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘ஸாங்க்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
    இரண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X