Announcement

Collapse
No announcement yet.

கீதை – மூன்றாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – மூன்றாவது அத்தியாயம்

    கீதை – மூன்றாவது அத்தியாயம்

    கர்ம யோகம்

    கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.



    அதனால் அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே செய்கிறோம்,’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.

    अर्जुन उवाच
    ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
    तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥
    அர்ஜுந உவாச
    ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந|
    தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ஜநார்த³ந = ஜநார்த்தனா
    கர்மண: பு³த்³தி⁴ ஜ்யாயஸீ = செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது
    தே மதா சேத் = நின் கொள்கையாயின்
    தத் கோ⁴ரே கர்மணி = இந்தக் கொடிய செய்கையில்
    மாம் கிம் நியோஜயஸி கேஸ²வ = என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
    ________________________________________
    व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
    तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥
    வ்யாமிஸ்²ரேணேவ வாக்யேந பு³த்³தி⁴ம் மோஹயஸீவ மே|
    ததே³கம் வத³ நிஸ்²சித்ய யேந ஸ்²ரேயோऽஹமாப்நுயாம் ||3-2||
    வ்யாமிஸ்²ரேண இவ வாக்யேந = குழம்பியது போன்ற பேச்சினால்
    மே பு³த்³தி⁴ம் மோஹயஸி இவ = என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
    யேந அஹம் ஸ்²ரேய: ஆப்நுயாம் = எது எனக்கு நன்மை தருமென்பதை
    தத் ஏகம் நிஸ்²சித்ய வத³ = அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்
    குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.
    ________________________________________
    श्रीभगवानुवाच
    लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
    ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    லோகேऽஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா² புரா ப்ரோக்தா மயாநக⁴|
    ஜ்ஞாநயோகே³ந ஸாங்க்²யாநாம் கர்மயோகே³ந யோகி³நாம் ||3-3||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீபகவான் சொல்லுகிறான்
    அநக⁴ = பாபமொன்று மில்லாத அர்ஜுனா
    லோகே மயா = இவ்வுலகில் என்னால்
    த்³விவிதா⁴ நிஷ்டா² = இரண்டுவித நிஷ்டை
    புரா ப்ரோக்தா = முன்னர் கூறப்பட்டது
    ஸாங்க்²யாநாம் ஜ்ஞாநயோகே³ந = ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்
    யோகி³நாம் கர்மயோகே³ந = யோகிகளின் கர்ம யோகத்தால்
    ஸ்ரீபகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
    ________________________________________
    न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
    न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥
    ந கர்மணாமநாரம்பா⁴ந்நைஷ்கர்ம்யம் புருஷோऽஸ்²நுதே|
    ந ச ஸந்ந்யஸநாதே³வ ஸித்³தி⁴ம் ஸமதி⁴க³ச்ச²தி ||3-4||
    புருஷ: கர்மணாம் அநாரம்பா⁴த் = தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்
    நைஷ்கர்ம்யம் ந அஸ்²நுதே = செயலற்ற நிலை அடைவதில்லை
    ஸந்ந்யஸநாத் ஏவ = துறவினாலேயே
    ஸித்³தி⁴ம் ச ந ஸமதி⁴க³ச்ச²தி = ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்
    தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
    ________________________________________
    न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्।
    कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः॥५॥
    ந ஹி கஸ்²சித்க்ஷணமபி ஜாது திஷ்ட²த்யகர்மக்ருத்|
    கார்யதே ஹ்யவஸ²: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு³ணை: ||3-5||
    ஹி கஸ்²சித் ஜாது க்ஷணம் அபி = எவனும் ஒரு கணப்பொழுதேனும்
    அகர்மக்ருத் ந திஷ்ட²தி = செய்கையின்றிருப்பதில்லை
    ஹி ப்ரக்ருதிஜை கு³ணை: = இயற்கையில் விளையும் குணங்களே
    ஸர்வ: அவஸ²: = எல்லா உயிர்களையும் தன் வசமின்றி
    கர்ம கார்யதே = தொழில் புரிவிக்கின்றன
    எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.
    ________________________________________
    कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्।
    इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते॥६॥
    கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
    இந்த்³ரியார்தா²ந்விமூடா⁴த்மா மித்²யாசார: ஸ உச்யதே ||3-6||
    ய: விமூடா⁴த்மா = எந்த மூடாத்மா
    கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய = கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு
    இந்த்³ரியார்தா²ந் = இந்திரிய விஷயங்களை
    மநஸா ஸ்மரந் ஆஸ்தே = மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ
    ஸ மித்²யாசார: உச்யதே = பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்
    கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
    ________________________________________
    यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन।
    कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते॥७॥
    யஸ்த்விந்த்³ரியாணி மநஸா நியம்யாரப⁴தேऽர்ஜுந|
    கர்மேந்த்³ரியை: கர்மயோக³மஸக்த: ஸ விஸி²ஷ்யதே ||3-7||
    து அர்ஜுந = ஆனால் அர்ஜுநா
    ய மநஸா இந்த்³ரியாணி = எவன் இந்திரியங்களை மனத்தால்
    நியம்ய அஸக்த: = கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்
    கர்மேந்த்³ரியை: கர்மயோக³ம் ஆரப⁴தே = கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ
    ஸ விஸி²ஷ்யதே = அவன் சிறந்தவன்
    அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
    ________________________________________
    नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः।
    शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मणः॥८॥
    நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
    ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்³த்⁴யேத³கர்மண: ||3-8||
    நியதம் கர்ம த்வம் குரு = விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்
    ஹி அகர்மண: கர்ம ஜ்யாய: = ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ
    அகர்மண: = தொழிலின்றி
    தே ஸ²ரீரயாத்ரா அபி = உனக்கு உடம்பைப் பேணுதல் கூட
    ந ப்ரஸித்³த்⁴யேத் = சாத்தியம் ஆகாது
    விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
    ________________________________________
    यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।
    तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर॥९॥
    யஜ்ஞார்தா²த்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மப³ந்த⁴ந:|
    தத³ர்த²ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க³: ஸமாசர ||3-9||
    யஜ்ஞார்தா²த் கர்மண: = வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது
    அந்யத்ர அயம் லோக கர்மப³ந்த⁴ந: = தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது
    கௌந்தேய முக்தஸங்க³: = குந்தி மகனே, பற்றைக் களைந்து
    தத³ர்த²ம் கர்ம ஸமாசர = அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு
    வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.
    ________________________________________
    सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
    अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्॥१०॥
    ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
    அநேந ப்ரஸவிஷ்யத்⁴வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது⁴க் ||3-10||
    புரா = முன்பு
    ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா = பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து
    உவாச = சொல்லினான்
    அநேந ப்ரஸவிஷ்யத்⁴வம் = இதனால் பல்குவீர்கள்
    ஏஷ: வ: இஷ்டகாமது⁴க் அஸ்து = இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களையெல்லாம் தருவதாக ஆகட்டும்
    முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
    ________________________________________
    देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
    परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥
    தே³வாந்பா⁴வயதாநேந தே தே³வா பா⁴வயந்து வ:|
    பரஸ்பரம் பா⁴வயந்த: ஸ்²ரேய: பரமவாப்ஸ்யத² ||3-11||
    அநேந தே³வாந் பா⁴வயத = இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்
    தே தே³வா வ: பா⁴வயந்து = அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்
    பரஸ்பரம் பா⁴வயந்த: = பரஸ்பரமான பாவனை செய்வதனால்
    பரம் ஸ்²ரேய: = உயர்ந்த நலத்தை
    அவாப்ஸ்யத² = எய்துவீர்கள்
    இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
    ________________________________________
    इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
    तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः॥१२॥
    இஷ்டாந்போ⁴கா³ந்ஹி வோ தே³வா தா³ஸ்யந்தே யஜ்ஞபா⁴விதா:|
    தைர்த³த்தாநப்ரதா³யைப்⁴யோ யோ பு⁴ங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||
    யஜ்ஞபா⁴விதா: தே³வா: = வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்
    வ: இஷ்டாந் போ⁴கா³ந் = உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்
    ஹி தா³ஸ்யந்தே = தருவர்
    தை த³த்தாந் = அவர்கள் தந்தவற்றுக்கு
    ஏப்⁴ய: அப்ரதா³ய ய: பு⁴ங்க்தே = அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்
    ஸ: ஸ்தேந ஏவ = கள்வனே ஆவான்.
    வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”
    ________________________________________
    यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
    भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्॥१३॥
    யஜ்ஞஸி²ஷ்டாஸி²ந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி³ஷை:|
    பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13||
    யஜ்ஞஸி²ஷ்டாஸி²ந: ஸந்த: = வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்
    ஸர்வகில்பி³ஷை: முச்யந்தே = எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்
    யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி = தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்
    தே து அக⁴ம் பு⁴ஞ்ஜதே = பாவத்தை உண்ணுகிறார்கள்
    வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.
    ________________________________________
    अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
    यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥१४॥
    அந்நாத்³ப⁴வந்தி பூ⁴தாநி பர்ஜந்யாத³ந்நஸம்ப⁴வ:|
    யஜ்ஞாத்³ப⁴வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்³ப⁴வ: ||3-14||
    பூ⁴தாநி அந்நாத்³ ப⁴வந்தி = உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன
    பர்ஜந்யாத் அந்ந ஸம்ப⁴வ: = மழையால் உணவு தோன்றுகிறது
    பர்ஜந்ய: யஜ்ஞாத்³ ப⁴வதி = மழை வேள்வியால் ஆகிறது
    யஜ்ஞ: கர்ம ஸமுத்³ப⁴வ: = வேள்வி செய்கையினின்று பிறப்பது
    அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.
    ________________________________________
    कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
    तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥
    கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் வித்³தி⁴ ப்³ரஹ்மாக்ஷரஸமுத்³ப⁴வம்|
    தஸ்மாத்ஸர்வக³தம் ப்³ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் ||3-15||
    கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் = செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்
    ப்³ரஹ்ம: அக்ஷரஸமுத்³ப⁴வம் வித்³தி = பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது
    தஸ்மாத் ஸர்வக³தம் ப்³ரஹ்ம = ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்
    நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் = எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது
    செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

    Continued
Working...
X