Announcement

Collapse
No announcement yet.

கீதை – மூன்றாவது அத்தியாயம்3[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – மூன்றாவது அத்தியாயம்3[2]

    கர்ம யோகம்: Continued




    एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
    अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

    ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
    அகா⁴யுரிந்த்³ரியாராமோ மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி ||3-16||

    பார்த² ய: இஹ = பார்த்தா எவன் இவ்வுலகில்
    ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் = இங்ஙனம் சுழலும் வட்டத்தை
    ந அநுவர்தயதி = பின்பற்றி ஒழுகாதவனாக
    இந்த்³ரியாராம: = புலன்களிலே களிக்கிறானோ
    ஸ: அகா⁴யு: = அவன் பாப வாழ்க்கையுடையான்
    மோக⁴ம் ஜீவதி = (அவன்) வாழ்க்கை விழலேயாம்

    இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

    यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
    आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते॥१७॥

    யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா³த்மத்ருப்தஸ்²ச மாநவ:|
    ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்³யதே ||3-17||

    து ய: மாநவ: = ஆனால் எந்த மனிதன்
    ஆத்மரதி ஏவ ச = தன்னிலேதான் இன்புறுவான்
    ஆத்மத்ருப்த ச = தன்னிலேதான் திருப்தியடைவான்
    ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத் = தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்
    தஸ்ய கார்யம் ந வித்³யதே = அவனுக்குத் தொழிலில்லை

    தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

    नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन।
    न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः॥१८॥

    நைவ தஸ்ய க்ருதேநார்தோ² நாக்ருதேநேஹ கஸ்²சந|
    ந சாஸ்ய ஸர்வபூ⁴தேஷு கஸ்²சித³ர்த²வ்யபாஸ்²ரய: ||3-18||

    தஸ்ய இஹ க்ருதேந = அவனுக்குச் செய்கையில்
    கஸ்²சந அர்த² ந = யாதொரு பயனுமில்லை
    அக்ருதேந: ஏவ ந = செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை
    ச ஸர்வபூ⁴தேஷு = எந்த உயிரிலும்
    அஸ்ய அர்த² வ்யபாஸ்²ரய: = அவனுக்கு எவ்வித பயனும்
    கஸ்²சித் ந = சிறிது கூட இல்லை

    அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

    तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर।
    असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुषः॥१९॥

    தஸ்மாத³ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர|
    அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: ||3-19||

    தஸ்மாத் ஸததம் அஸக்த: = ஆதலால், எப்போதும் பற்று நீக்கி
    கார்யம் கர்ம = செய்யத்தக்க தொழிலை
    ஸமாசர = செய்து கொண்டிரு
    ஹி அஸக்த: = ஏனெனில் பற்றில்லாமல்
    கர்ம ஆசரந் பூருஷ: = தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்
    பரம் ஆப்நோதி = பரம்பொருளை எய்துகிறான்

    ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

    कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः।
    लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि॥२०॥

    கர்மணைவ ஹி ஸம்ஸித்³தி⁴மாஸ்தி²தா ஜநகாத³ய:|
    லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி ||3-20||

    ஜநகாத³ய: ஹி = ஜனகன் முதலியோரும்
    கர்மணா ஏவ = செய்கையாலேயே
    ஸம்ஸித்³திம் ஆஸ்தி²தா = சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்
    லோகஸங்க்³ரஹம் ஸம்பஸ்²யந் = உலக நன்மையைக் கருதியும்
    அபி கர்தும் ஏவ அர்ஹஸி = நீ தொழில் புரிதல் தகும்

    ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.

    यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।
    स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥२१॥

    யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||

    ஸ்²ரேஷ்ட² யத் யத் ஆசரதி = எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ
    இதர ஜந: தத் தத் ஏவ = மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்)
    ஸ யத் ப்ரமாணம் குருதே = அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ
    லோக தத் அநுவர்ததே = உலகத்தார் அதையே தொடருகிறார்கள்

    எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

    न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन।
    नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि॥२२॥

    ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
    நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ||3-22||

    பார்த² = பார்த்தா
    மே = எனக்கு
    த்ரிஷு லோகேஷு = மூன்றுலகத்திலும்
    கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி = யாதொரு கடமையுமில்லை
    அவாப்தவ்யம் அவாப்தம் ச ந = பெற்றிராத பேறுமில்லை
    கர்மணி ஏவ வர்தே = தொழிலிலேதான் இயங்குகிறேன்

    பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

    यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः।
    मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः॥२३॥

    யதி³ ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்³ரித:|
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||3-23||

    ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா!
    ஜாது அஹம் அதந்த்³ரித: = ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
    யதி³ கர்மணி ந வர்தேயம் = எப்போதும் தொழில் கொண்டிராவிடின்
    ஸர்வஸ²: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே = எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்

    நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम्।
    सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः॥२४॥

    உத்ஸீதே³யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேத³ஹம்|
    ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ||3-24||

    அஹம் கர்ம ந குர்யாம் சேத் = நான் தொழில் செய்யாவிட்டால்
    இமே லோகா: உத்ஸீதே³யு = இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்
    ஸங்கரஸ்ய கர்தா = குழப்பத்தை ஆக்கியோன்
    இமா: ப்ரஜா: = இந்த மக்களை
    உபஹந்யாம் ஸ்யாம் = கொல்வோன் ஆவேன்

    நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

    सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत।
    कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम्॥२५॥

    ஸக்தா: கர்மண்யவித்³வாம்ஸோ யதா² குர்வந்தி பா⁴ரத|
    குர்யாத்³வித்³வாம்ஸ்ததா²ஸக்தஸ்²சிகீர்ஷுர் லோகஸங்க்³ரஹம் ||3-25||

    பா⁴ரத = பாரதா
    அவித்³வாம்ஸ: கர்மணி ஸக்தா: = அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்
    யதா² குர்வந்தி = எப்படித் தொழில் செய்கிறார்களோ
    ததா² வித்³வாம்ஸ: அஸக்த: = அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி
    லோகஸங்க்³ரஹம் சிகீர்ஷு = உலக நன்மையை நாடி
    குர்யாத் = தொழில் செய்ய வேண்டும்

    பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

    न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम्।
    जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन्॥२६॥

    ந பு³த்³தி⁴பே⁴த³ம் ஜநயேத³ஜ்ஞாநாம் கர்மஸங்கி³நாம்|
    ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்³வாந்யுக்த: ஸமாசரந் ||3-26||

    யுக்த: வித்³வாந் = அறிவுடையோன்
    கர்மஸங்கி³நாம் அஜ்ஞாநாம் = தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு
    பு³த்³தி⁴பே⁴த³ம் ந ஜநயேத் = புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
    ஸர்வகர்மாணி ஸமாசரந் = எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி
    ஜோஷயேத் = (அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்

    அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.

    प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः।
    अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते॥२७॥

    ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
    அஹங்காரவிமூடா⁴த்மா கர்தாஹமிதி மந்யதே ||3-27||

    ப்ரக்ருதே: கு³ணை: ஸர்வஸ²: = இயற்கையின் குணங்களால் எங்கும்
    கர்மாணி க்ரியமாணாநி = தொழில்கள் செய்யப்படுகின்றன
    அஹங்கார விமூடா⁴த்மா = அகங்காரத்தால் மயங்கியவன்
    கர்தா அஹம் இதி மந்யதே = “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்

    எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

    तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः।
    गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते॥२८॥

    தத்த்வவித்து மஹாபா³ஹோ கு³ணகர்மவிபா⁴க³யோ:|
    கு³ணா கு³ணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ||3-28||

    து மஹாபா³ஹோ = ஆனால் பெருந்தோளாய்!
    கு³ண கர்ம விபா⁴க³யோ: = குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்
    தத்த்வவித் = உண்மையறிந்தோன்
    கு³ணா கு³ணேஷு வர்தந்த = குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன
    இதி மத்வா ந ஸஜ்ஜதே = என்று கருதி பற்றற்றிருப்பான்

    குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், ‘குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.

    प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु।
    तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत्॥२९॥

    ப்ரக்ருதேர்கு³ணஸம்மூடா⁴: ஸஜ்ஜந்தே கு³ணகர்மஸு|
    தாநக்ருத்ஸ்நவிதோ³ மந்தா³ந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத் ||3-29||

    ப்ரக்ருதே: கு³ணஸம்மூடா⁴: = இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்
    கு³ணகர்மஸு ஸஜ்ஜந்தே = குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்
    தாந் அக்ருத்ஸ்நவித³: = அந்த முற்றும் அறிந்திராத
    மந்தா³ந் ந விசாலயேத் = சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது

    இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.

    मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा।
    निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः॥३०॥

    மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்⁴யாத்மசேதஸா|
    நிராஸீ²ர்நிர்மமோ பூ⁴த்வா யுத்⁴யஸ்வ விக³தஜ்வர: ||3-30||

    அத்⁴யாத்மசேதஸா: = என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக
    ஸர்வாணி கர்மாணி = எல்லாச் செய்கைகளையும்
    மயி ஸந்ந்யஸ்ய = என்னில் அர்ப்பணம் செய்து விட்டு
    விக³தஜ்வர: = மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்
    நிராஸீ² நிர்மம: பூ⁴த்வா = ஆசை நீங்கி, எனது என்பது அற்று
    யுத்⁴யஸ்வ = போர் செய்

    எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

    Continued
Working...
X