Announcement

Collapse
No announcement yet.

கீதை – மூன்றாவது அத்தியாயம்3[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – மூன்றாவது அத்தியாயம்3[3]

    கர்ம யோகம்: Continued


    ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः।
    श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः॥३१॥

    யே மே மதமித³ம் நித்யமநுதிஷ்ட²ந்தி மாநவா:|
    ஸ்²ரத்³தா⁴வந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி⁴: ||3-31||

    யே மாநவா: அநஸூயந்த: = எந்த மனிதர் பொறாமையின்றி
    ஸ்²ரத்³தா⁴வந்த: = சிரத்தையுடையோராய்
    மே இத³ம் மதம் = என்னுடைய இந்த கொள்கையை
    நித்யம் அநுதிஷ்ட²ந்தி = எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ
    தே அபி கர்மபி⁴: முச்யந்தே = அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்

    என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

    ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम्।
    सर्वज्ञानविमूढांस्तान्विद्धि नष्टानचेतसः॥३२॥

    யே த்வேதத³ப்⁴யஸூயந்தோ நாநுதிஷ்ட²ந்தி மே மதம்|
    ஸர்வஜ்ஞாநவிமூடா⁴ம்ஸ்தாந்வித்³தி⁴ நஷ்டாநசேதஸ: ||3-32||

    து யே அப்⁴யஸூயந்த: = யாவர் பொறாமையால்
    மே எதத் மதம் ந அநுதிஷ்ட²ந்தி = என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ
    தாந் அசேதஸ: = அந்த மூடர்களை
    ஸர்வஜ்ஞாந விமூடா⁴ந் = முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்
    நஷ்டாந் வித்³தி⁴ = நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்

    என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

    सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि।
    प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति॥३३॥

    ஸத்³ருஸ²ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி|
    ப்ரக்ருதிம் யாந்தி பூ⁴தாநி நிக்³ரஹ: கிம் கரிஷ்யதி ||3-33||

    பூ⁴தாநி ப்ரக்ருதிம் யாந்தி = எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன
    ஜ்ஞாந்வாந் அபி = ஞானமுடையவன் கூட
    ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்³ருஸ²ம் = தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே
    சேஷ்டதே = நடக்கிறான்
    நிக்³ரஹ: கிம் கரிஷ்யதி = (என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

    ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

    इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ।
    तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ॥३४॥

    இந்த்³ரியஸ்யேந்த்³ரியஸ்யார்தே² ராக³த்³வேஷௌ வ்யவஸ்தி²தௌ|
    தயோர்ந வஸ²மாக³ச்சே²த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி²நௌ ||3-34||

    இந்த்³ரியஸ்ய இந்த்³ரியஸ்ய அர்தே² = இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்
    ராக³த்³வேஷௌ வ்யவஸ்தி²தௌ = விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன
    தயோ: வஸ²ம் ந ஆக³ச்சே²த் = இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது
    ஹி தௌ அஸ்ய பரிபந்தி²நௌ = ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்

    இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

    श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
    स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः॥३५॥

    ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத்|
    ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: பரத⁴ர்மோ ப⁴யாவஹ: ||3-35||

    ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்
    விகு³ண: ஸ்வத⁴ர்மோ ஸ்²ரேயாந் = குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது
    ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: = ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்
    பரத⁴ர்ம: ப⁴யாவஹ: = பரதர்மம் பயத்துக்கிடமானது

    நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

    अर्जुन उवाच।
    अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः।
    अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः॥३६॥

    அர்ஜுந உவாச|
    அத² கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:|
    அநிச்ச²ந்நபி வார்ஷ்ணேய ப³லாதி³வ நியோஜித: ||3-36||

    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    வார்ஷ்ணேய = விருஷ்ணி குலத் தோன்றலே
    அத² அயம் பூருஷ: = பின் இந்த மனிதன்
    அநிச்ச²ந் அபி = இச்சையில்லாத போதும்
    ப³லாத் நியோஜித: இவ = வலியக் கொண்டு புகுத்துவதுபோல்
    கேந ப்ரயுக்த: பாபம் சரதி = எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

    श्रीभगवानुवाच
    काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः।
    महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम्॥३७॥

    ஸ்ரீப⁴க³வாநுவாச
    காம ஏஷ க்ரோத⁴ ஏஷ ரஜோகு³ணஸமுத்³ப⁴வ:|
    மஹாஸ²நோ மஹாபாப்மா வித்³த்⁴யேநமிஹ வைரிணம் ||3-37||

    ஸ்ரீப⁴க³வாநுவாச = பகவான் சொல்லுகிறான்
    ரஜோகு³ணஸமுத்³ப⁴வ: = ரஜோ குணத்திற்பிறப்பது
    ஏஷ: காம: க்ரோத⁴ = இஃது விருப்பமும் சினமும்
    மஹாஸ²ந: மஹாபாப்மா = பேரழிவு செய்வது; பெரும்பாவம்
    யேநம் இஹ வைரிணம் வித்³தி⁴ = இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்

    பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

    धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च।
    यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्॥३८॥

    தூ⁴மேநாவ்ரியதே வஹ்நிர்யதா²த³ர்ஸோ² மலேந ச|
    யதோ²ல்பே³நாவ்ருதோ க³ர்ப⁴ஸ்ததா² தேநேத³மாவ்ருதம் ||3-38||

    யதா² தூ⁴மேந வஹ்நி= எப்படி புகையினால் தீயும்
    மலேந ஆத³ர்ஸ²: ச = அழுக்கால் கண்ணாடியும்
    ஆவ்ரியதே = மறைக்கப் படுகிறதோ
    யதா² உல்பே³ந க³ர்ப⁴ ஆவ்ருத: = எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ
    ததா² தேந இத³ம் ஆவ்ருதம் = அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது

    புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

    आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा।
    कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च॥३९॥

    ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா|
    காமரூபேண கௌந்தேய து³ஷ்பூரேணாநலேந ச ||3-39||

    ச கௌந்தேய = மேலும் குந்தியின் மகனே
    து³ஷ்பூரேண அநலேந = திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்
    காமரூபேண = விருப்பமேனும் வடிவில் இருப்பதும்
    ஜ்ஞாநிந: நித்யவைரிணா = ஞானிக்கு நித்தியப் பகை
    ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம் = இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது

    குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

    इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते।
    एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम्॥४०॥

    இந்த்³ரியாணி மநோ பு³த்³தி⁴ரஸ்யாதி⁴ஷ்டா²நமுச்யதே|
    ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தே³ஹிநம் ||3-40||

    இந்த்³ரியாணி மந: பு³த்³தி⁴ = இந்திரியங்களும், மனமும், புத்தியும்
    அஸ்ய அதி⁴ஷ்டா²நம் உச்யதே = இதற்கு நிலைக்களன் என்பர்
    ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய = இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து
    தே³ஹிநம் விமோஹயத் = மனிதனை மயங்குவிக்கிறது

    இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

    तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ।
    पाप्मानं प्रजहि ह्येनं ज्ञानविज्ञाननाशनम्॥४१॥

    தஸ்மாத்த்வமிந்த்³ரியாண்யாதௌ³ நியம்ய ப⁴ரதர்ஷப⁴|
    பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸ²நம் ||3-41||

    தஸ்மாத் ப⁴ரதர்ஷப⁴ = ஆதலால் பாரத ரேறே
    ஆதௌ³ இந்த்³ரியாணி நியம்ய = தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு
    ஜ்ஞாந விஜ்ஞாந நாஸ²நம் = ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய
    ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி = இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு

    ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

    इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः।
    मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः॥४२॥

    இந்த்³ரியாணி பராண்யாஹுரிந்த்³ரியேப்⁴ய: பரம் மந:|
    மநஸஸ்து பரா பு³த்³தி⁴ர்யோ பு³த்³தே⁴: பரதஸ்து ஸ: ||3-42||

    இந்த்³ரியாணி பராணி ஆஹு = இந்திரியங்களை உயர்வுடையன என்பர்
    இந்த்³ரியேப்⁴ய: பரம் மந: = அவற்றிலும் மனம் மேல்
    மநஸ: து பரா பு³த்³தி⁴ = மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்
    பு³த்³தே⁴: பரத து ஸ: = புத்திக்கு மேலே அவன் (ஆத்மா)

    இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

    एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना।
    जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्॥४३॥

    ஏவம் பு³த்³தே⁴: பரம் பு³த்³த்⁴வா ஸம்ஸ்தப்⁴யாத்மாநமாத்மநா|
    ஜஹி ஸ²த்ரும் மஹாபா³ஹோ காமரூபம் து³ராஸத³ம் ||3-43||

    ஏவம் பு³த்³தே⁴: பரம் = இங்ஙனம் புத்திக்கு மேலான
    பு³த்³த்⁴வா = பொருளை (ஆத்மாவை) உணர்ந்து
    ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்⁴ய = தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு
    து³ராஸத³ம் காமரூபம் = வெல்லற்கரிய விருப்பமாம்
    ஸ²த்ரும் ஜஹி மஹாபா³ஹோ = பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे कर्मयोगो नाम तृतीयोऽध्याय: || 3 ||

    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘கர்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
    மூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.

    Source:Sangatham.com
Working...
X